சாதி ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி.. தனிச் சட்டம் உறுதி!" - விழுப்புரத்தில் எழிலன் நாகநாதன் அதிரடிப் பேச்சு!
பாஷா கமிட்டி தரவுகளின்படி சாதி ஆவணப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும்: விழுப்புரத்தில் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ உறுதி!

விழுப்புரம் : நூறு நாள் வேலை திட்டத்தினை திமுக சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாக அறிவித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளதாகவும், சாதி ஆவண படுகொலைக்கு எதிராக பாஷா கமிட்டி தரவுகளின் அடிப்படையில் சட்டமியற்றப்படுமென திமுக எம் எல் ஏவும் திட்டக்குழு உறுப்பினருமான எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி திடலில் திமுக தலைகுணியாது என்ற தலைமப்பில் பொதுக்கூட்டம் திமுக எம் எல் ஏவும் திட்டக்குழு உறுப்பினருமான எழிலன் நாகநாதன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம் எல் ஏ லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக திட்டக்குழு உறுப்பினர் எழிலன் நாகநாதன் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு 28 ஆயிரம் கோரிக்கைகள் மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் திமுக தேர்தல் அறிக்கை என்பது மக்களிடம் பெற்ற கோரிக்கைகளை உள்வாங்கி கொண்டு கொடுக்கும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதியானது மக்களால் பெறப்பட்டதா அல்லது தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை, எடப்பாடி பழனிச்சாமி மகளிர் உரிமை தொகையை நிறைவேற்றவே முடியாது என தெரிவித்த அவர் இன்றைக்கு தோல்வி பயத்தின் அடிப்படையில் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி கொண்டு உள்ளதாகவும் தேசிய வங்கிகளில் மாணவர்கள் கல்வி கடன் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள தமிழக அரசின் வங்கிகளில் உள்ள கடன்கள் தான் தமிழக அரசு தள்ளுபடி செய்யமுடியும் தேசிய வங்கிகளில் உள்ள கடன்கள் ஒன்றிய அரசு தான் செய்ய முடியும் டபுள் இன்ஜின் டபுள் இன்ஜின் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஒன்றிய அரசிடம் செய்ய இப்போது கூட வலியுறுத்தலாம் என கூறினார்.
ஊரக வேலை உறுதி திட்டத்தில் 125 நாள் வேலை திட்டத்தினை சீர் குலைக்கும் வகையில் திமுக செயல்படுவதாக தெரிவித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளதாகவும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றி பிபிராம்ஜி திட்டம் என கூறிவிட்டு 125 நாட்கள் வேலை என தெரிவித்து குறிப்பிட்ட விதிமுறைகள் வகுப்பது வேலையை அடையாளப்படுத்தி கொடுப்போம் என்பது எப்படி செய்ய முடியும் என்றும் நூறு நாள் வேலை திட்டத்தில் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்து நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்து வருகிறார்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் 53 நாட்கள் வேலையை கொடுப்பதாக தெரிவித்தார்.
சாதி ஆவணக்கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர வேண்டுமென பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் நீதியரசர் பாஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது இதற்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு ஆணையம் குறைகேட்கப்பட்டு வருவதால் நீட் தேர்விற்கு சட்டம் இயற்றப்பட்டது போல்
பாஷா கமிட்டி அறிக்கை தரவுகளின் அடிப்படையில் கட்டாயம் சட்டமியற்றப்படும் என தெரிவித்தார்.
திமுக கூட்டணி என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டணி கொள்கை கூட்டணி கட்டுப்போப்பான கூட்டணி மதச்சார்ப்பற்ற கூட்டணி மாநில உரிமைக்களுக்கான கூட்டணி இது வலுவாக உள்ளது. திமுக கூட்டணில் தொகுதி பங்கீடு சீட் தொடர்பாக விரைவில் சுமூக தீர்வு காணப்படும்.
ஒன்றிய பாஜக அரசு வந்த பிறகு மருத்துவ துறைக்கு 2.5 நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆனால் 1.5 விழுக்காடு தான் ஒதுக்கப்படுகிறது அதில் 75 விழுக்காடு மாநில அரசின் விழுக்காடு நிதியாக உள்ளது. மருத்துவத்திற்கு மட்டும் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி செஸ் வரி மூலம் தமிழகத்திலிருந்து பெறப்பட்டு மீண்டும் ஒதுக்கீடு செய்யாமல் உள்ளது. அவர்களால் சரியாக நிதி ஒதுக்கீடு செய்தால் நிரந்தர பணியாளர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் 403 நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் உள்ள வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.























