மேலும் அறிய

அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி..

அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி உள்ளதால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?

புதுச்சேரி :அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி உள்ளதால் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான, அமுதசுரபி கூட்டுறவு நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் காந்திவீதியில் உள்ளது. வெளிமார்க்கெட்டில் விற்கப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இந்த மளிகை கடை தொடங்கப்பட்டது. இதேபோல் அரசு சார்பில் கட்டுமான தொழிலாளர்கள் உள்பட பலருக்கு வழங்கப்படும் கூப்பன்களுக்கு இங்கு தான் மளிகை பொருட்கள் வாங்க அனுமதி வழங்கப்படும்.


அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி..

நகரின் மையப்பகுதியில் இந்த கட்டிடம் அமைந்துள்ளதால் பலர் மாதந்தோறும் இங்கு வந்து தான் மளிகை பொருட்கள் வாங்குவர். இதன் அடித்தளத்தில் அரிசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும், முதல் தளத்தில் மளிகை பொருட்களும், 2-வது தளத்தில் துணிக்கடையும், வாட்ச் கடையும் செயல்பட்டு வருகிறது.

நிதி நெருக்கடி ஆனால் சமீப காலமாக அமுதசுரபி நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு முறையாக மாதந்தோறும் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமுதசுரபி நிறுவனம் மூலம் 2015-16-ம் நிதியாண்டில் அரசு சார்பில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர் விநியோகம் செய்யப்பட்டன.

இதற்காக ரூ.48 கோடி செலவானது. இதற்கு அப்போதைய அரசு நிதி ஒதுக்கவில்லை. அமுதசுரபி நிறுவனத்திடம் நிதி இல்லாததால் வங்கியில் கடன் வாங்கப்பட்டது. அதன்பின் 2016-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அந்த நிதி அமுதசுரபிக்கு வழங்கப்படவில்லை. வங்கியில் வாங்கிய கடனுக்காக இன்னும் அந்த நிறுவனம் வட்டி கட்டி வருகிறது. இங்கிருந்து முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு எழுதுபொருட்கள், தூய்மை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.


அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி..

இதற்கான தொகையை அரசு அலுவலகங்கள் ஒவ்வொரு மாதமும் அமுதசுரபிக்கு செலுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அரசு துறைகள், அமுதசுரபிக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை. அரசு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிய பணமும் செலுத்தப்படவில்லை. அந்த வகையில் மொத்தம் ரூ.58 கோடி பாக்கி உள்ளது. இதனால் கொள்முதல் செய்வது குறைந்து நிதி நெருக்கடியால் அமுதசுரபி சிக்கித் தவிக்கிறது. அங்கு பணி செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்குவது தடைபட்டுள்ளது.


அரசு நிறுவனங்கள் மூலம் ரூ.58 கோடி பாக்கி.. நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அமுதசுரபி..

பரந்து விரிந்து காணப்படும் மளிகை கடையில் உள்ள ரேக்குகள் அனைத்தும் காலியாக உள்ளன. ஆங்காங்கே ஒரு சில பொருட்கள் மட்டும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. துணிக்கடையிலும் இதே நிலை இருந்து வருவதால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே அரசு நடவடிக்கை எடுத்து வாராக்கடன்களை முழுமையாக வசூலித்து அமுதசுரபியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டும். முன்பு இயங்கியது போல மளிகை பொருட்களை முழுமையாக கொள்முதல் செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தொடரும் சோதனை.. தமிழ்நாட்டில் ஊழல் என்பதே இனி இருக்காது.. செங்கோட்டையன் உறுதி!
தொடரும் சோதனை.. தமிழ்நாட்டில் ஊழல் என்பதே இனி இருக்காது.. செங்கோட்டையன் உறுதி!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோற்சவம்: கருட சேவையின் தெய்வீக மகிமை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோற்சவம்: கருட சேவையின் தெய்வீக மகிமை!
School Reopen: ஜூன் 4ல் பள்ளிகள் திறப்பு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
School Reopen: ஜூன் 4ல் பள்ளிகள் திறப்பு.. போக்குவரத்துத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Embed widget