மேலும் அறிய

மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 1,078 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு 935 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

அமராவதி ஆற்றில் கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 1,078 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து ஆற்றில் வினாடிக்கு 935 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 89.51 அடியாக இருந்தது. அணைப்பகுதியில் 8 மில்லி மீட்டர் மழை பெய்தது.

கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு முன்தினம் காலை வினாடிக்கு 1,477 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 2,173 கன அடியாக அதிகரித்தது.

மாயனூர் கதவணை

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 16 ஆயிரத்து 731 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரத்து 986 கனடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில் சம்பா சாகுபடி பணிக்காக 14,186 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய் காலில் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆத்துப்பாளையம் அணை

கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு வினாடிக்கு 42 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.24 அடியாக இருந்தது.  பாசன வாய்க்காலில் வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சி அணை

திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால், 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பியுள்ளது. இதனால்  நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அனைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது.

பொன்னணி ஆறு அணை

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 27.87 அடியாக இருந்தது.

கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை  விடிய விடிய மழை பெய்தது. வங்க கடல் உருவான மாண்டஸ் புயல் கடந்த 9 தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. மேலும் வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 15 ஆம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி கரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 4 மணி வரை பல்வேறு இடங்களில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டமாகவும் அவ்வப்போது வெயிலும் அடித்தது.


மழையால் பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மழை நிலவரம்.

கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விபரம், அணைப்பாளையம் 3.6, கா. பரமத்தி 1.2 கிருஷ்ணராயபுரம்3,  மாயனூர் 5,  பஞ்சப்பட்டி 2.6,   பால விடுதி 5.2, ஆகிய அளவுகளின் மழை பெய்தது. மாவட்ட முழுவதும் சராசரியாக 1.72 மில்லிமீட்டர் மழை பதிவானது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget