மேலும் அறிய

’சுட்டெரித்த வெயில், சுடும் மணலில் மக்கள்; வசதிகளோடு அரசு அதிகாரிகள் குடும்பத்தினர்’- ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.

சென்னை மெரினா விமான சாகச நிகழ்வில், சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது என்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தள்ளுமுள்ளு போக்குவரத்து

சென்னை விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வரத் தொடங்கினர். கடற்கரையில் இருந்து காமராஜர் சாலைக்கு வர வெவ்வேறு வழிகள் இருந்ததால், அனைத்து வழிகளிலும் மக்கள் கூட்டம் சாரை சாரையாகப் படையடுத்தது. இதனால் ஏற்கெனவே வந்த கூட்டத்துடன் புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்தது. திரும்பச் செல்லும்போது போலீஸார் யாரும் போக்குவரத்தை ஒருங்கிணைக்காததால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் தள்ளுமுள்ளாக மாறியது.

30 பேர் மருத்துவமனையில் அனுமதி; ஒருவர் பலி

நண்பகலில் வெயிலும் கொளுத்தியதால், வியர்வை வழிந்து ஆறாகப் பெருகி ஓடியது. வயதானவர்களும் குழந்தைகளும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். தண்ணீர் அந்த நேரத்தில் எங்கும் விற்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். சிலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் பலியானார். 

இந்த நிலையில் இதுகுறித்து ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

‘’சென்னை மெரினா விமான சாகச நிகழ்வில், சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது.

காவல்துறை- மக்கள் இடையே வாக்குவாதம்

ரயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். ஆனால் அரசுப்  பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன.

இரண்டு‌ நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச் சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல் துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது! நிர்வாகம், கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராகத்தான் ஸ்டாலின் உள்ளார்’’.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Embed widget