மேலும் அறிய

எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடில் ஈடுபட்டதாக அப்போதைய அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். 

இந்த வழக்கை தலைமை நீதிபதிகள் சஞ்சிப் பேனர்ஜி மற்றும் செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 
இந்த வழக்கு தொடர்பாக கடந்த முறை ஆஜரான தமிழக அரசு,  “கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகளில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் உள்ளதா? என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. அதில் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதல்வர், அமைச்சரவை மற்றும் தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்” என்று கூறியது. வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை போலீஸ் சூப்பிரண்டு ஆர். பொன்னி கடந்த 2019, டிசம்பர் 18 ஆம் தேதி  சமர்பித்திருந்தார்.


எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு - 4 வாரத்துக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்..

இதற்கு மனுதாரர் தரப்பில் ஆரம்ப கட்ட விசாரணை முடிந்தாலும், அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்பட வில்லை என்பதால் நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தனர். 

அப்போது அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “இந்த வழக்கில் அதிகமான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. அத்துடன் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. ஆகையால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க  வேண்டும்” என்றார். தொடர்ந்து வேலுமணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி  “அரசு சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தியதில் எந்தக்குற்றசாட்டும் இல்லை என்று அறிக்கை சமர்பிக்கப்பட்டு, அந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதாடினார். இதனைக்கேட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும் நீதிமன்றம் ஏற்கவில்லை எனக் கூறி வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: இன்றிலிருந்து ஆட்டத்தைத் தொடங்கும் பெருமழை - தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை
இன்றிலிருந்து ஆட்டத்தைத் தொடங்கும் பெருமழை - தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை
" ஆபாசப் படம் வெளியிடுவேன் என மிரட்டல் " காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் - மாணவி எடுத்த முடிவு
கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
கள்ளக் காதலனை குஷிப்படுத்த சக பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண் !! பகீர் வாக்குமூலம்
Minister N Anand:
"கட்சியில் இணையும் புதியவர்கள்.. பயத்தில் தவெகவினர்! - ட்விஸ்ட் கொடுத்த அமைச்சர் ஆனந்த்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget