மேலும் அறிய

புதுச்சேரியில் அதிரடி நடவடிக்கை! குற்றங்களைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்.. அமைச்சர் அதிரடி

புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பட்டுள்ளது - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். டி.ஜி.பி., ஷாலினி சிங், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், கடந்த கூட்டத்தில் 60 நாட்களில் 19 சதவீத குற்றங்களுக்கு தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்றைக்கு 98 சதவீத குற்றங்களுக்கான குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 தினங்களில் தொடர்ந்து கொலைகள் நடந்துள்ளது. இது போன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம் எல்லோர் மீதும் போட்டுவிட முடியாது

புதுச்சேரியில் நாளுக்குநாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும், பார்க்கிங் வசதிகளை அதிகப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ரெஸ்டோ பார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டம் எல்லோர் மீதும் போட்டுவிட முடியாது. தொடர்ந்து குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது தான் குண்டர் சட்டம் போட முடியும். இதுவரை 4 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

தற்போது புதிய மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில், யார் எல்லாம் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு அவர்களை நேரடியாக பதிவு செய்து, அவர்களின் இருப்பிடத்தை, தகவல் மையத்திற்கு அளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறோம்.

காவல் துறையில் புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்பப்படும் 

தீபாவளி பண்டிகையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசப்பட்டது. காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம். ஒரு வார காலத்திற்குள் சீனியாரிட்டி அடிப்படையில் காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பதவி உயர்வு வழங்கப்படும். புதிதாக பணியிடங்களை உருவாக்கி நிரப்ப மத்திய அரசுக்கு கோப்புகள் தயார் செய்து அனுப்பியுள்ளோம். 882 ஐ.ஆர்.பி.என்., போலீசார் உள்ளனர். இரண்டாவது ஐ.ஆர்.பி.என்., யூனிட் தேவை என மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!
”பெண்களுக்கு 30000”தேஜஸ்வி அதிரடி வியூகம்!கலக்கத்தில் நிதிஷ்குமார் | Bihar Election Tejashwi Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
வைத்திலிங்கமும் திமுகவில்? ஓபிஎஸ்-ஐ விட்டு விலகும் முக்கிய தலைவர்! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
Ponmudi: திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
திமுகவில் அதிரடி மாற்றம்.! பொன்முடிக்கு மீண்டும் பொறுப்பு - இது தான் காரணமா.?
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கனமழை எச்சரிக்கை: நாளை 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் பெயர்ப் பட்டியல்: வெளியான முக்கிய அறிவிப்பு!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!
Ajith Seeman: “நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
“நான் சொன்னத தான் அஜித் சொல்லியிருக்கார்“; ஒரே போடாய் போட்ட சீமான் - என்ன விஷயம் தெரியுமா.?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
TN 10th 12th Exam Dates:10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு; இதோ லிஸ்ட்- தேர்வு முடிவுகள் எப்போது?
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு: இந்திக்கு சாதகம், தமிழுக்கு அநீதி? எழும் கண்டனம்
Embed widget