மேலும் அறிய

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இதுவரையிலான நிலவரத்தின் முழு விவரம்..

அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், நீலகிரி, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 9-ந் தேதி இரவு முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பியதுடன் வீடுகள், குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இந்த சூழலில், நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.

இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி., இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ந் தேதி கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் அடுத்த 3 நாட்களில் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.


இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இதுவரையிலான நிலவரத்தின் முழு விவரம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகள் உள்பட பல கிராமங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், அந்தமான் பகுதியில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நீலகிரி மாவட்டத்தில்1 13-ந் தேதி (இன்று), 14-ந் தேதி ( நாளை), 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மேற்கூறிய நான்கு நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயமும் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் பயணிக்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இதுவரையிலான நிலவரத்தின் முழு விவரம்..

முன்னதாக, சென்னையில் கடந்த நான்கு தினங்களாக பெய்த மழையால் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது, அவற்றில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. வேளச்சேரி, கொளத்தூர், ராயபுரம், வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாதததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. மணலியில் மழைநீருடன் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரும் கலந்துகொண்டதால் மழைநீர் தேங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Embed widget