மேலும் அறிய

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இதுவரையிலான நிலவரத்தின் முழு விவரம்..

அந்தமான் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனால், நீலகிரி, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 9-ந் தேதி இரவு முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பியதுடன் வீடுகள், குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இந்த சூழலில், நேற்று முன்தினம் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது.

இந்த நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி., இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து 15-ந் தேதி கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா நோக்கி வரலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் அடுத்த 3 நாட்களில் மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.


இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இதுவரையிலான நிலவரத்தின் முழு விவரம்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அந்த மாவட்டத்தில் உள்ள பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலைகள் உள்பட பல கிராமங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், அந்தமான் பகுதியில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் நீலகிரி மாவட்டத்தில்1 13-ந் தேதி (இன்று), 14-ந் தேதி ( நாளை), 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மேற்கூறிய நான்கு நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயமும் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் பயணிக்க வேண்டாம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. இதுவரையிலான நிலவரத்தின் முழு விவரம்..

முன்னதாக, சென்னையில் கடந்த நான்கு தினங்களாக பெய்த மழையால் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது, அவற்றில் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. வேளச்சேரி, கொளத்தூர், ராயபுரம், வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாதததால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளது. சென்னையின் பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. மணலியில் மழைநீருடன் புழல் ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரும் கலந்துகொண்டதால் மழைநீர் தேங்கியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
Embed widget