மேலும் அறிய
Advertisement
பணம் இல்லாததால் தள்ளிப்போன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - உதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பம்
லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக 35 லட்சம் ரூபாய் உதவிக்கரம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வலியோடும் வறுமையோடும் போராடும் குடும்பம்
தமிழக கேரள எல்லை நெய்யாற்றங்கரை சாயகோட்டுகோணம் பகுதியை சேர்ந்த சுனில் குமார் (49) இவருக்கு கடந்த மூன்றரை ஆண்டுகளாக உடலில் எங்கு தொட்டாலும் கடுமையாக வலி இதனால் படுக்கையிலேயே தவித்து வருகிறார் இவரது மனைவி சுரண்ணியா வீட்டில் இருந்து இவரையே கவனித்து வருகிறார் இவரது ஆதித்யா சுனில் குழந்தை இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து இந்த நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதற்கு ஒரே தீர்வு எர்ணாகுளம் அம்ரிதா மருத்துவனையில் மட்டுமே செய்ய முடியும் லிவர் மாற்று அறுவை சிகிச்சைக்காக முப்பத்தைந்து லட்சம் வரை செலவாகும் என்பதால் வலியோடு போராடி வருகிறார் மேலும் ஏ பாசிட்டிவ் ரத்தவகை கொண்ட கல்லீரல் தானம் பெற வேண்டியும் உள்ளது.
இவரது தாய் தந்தைக்கும் இதே போல் நோய் இருந்ததால் அதற்கான சிகிச்சைக்காகவும் , தங்கையை திருமணம் செய்து கொடுத்தும் கடனில் இருந்த இவருக்கு ஏற்கனவே இவர் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வருவதால் தினம் தோறும் குடும்ப செலவுக்கே பணம் இன்றி தவித்து வருகின்றனர் குடும்ப செலவு சிகிச்சை செலவிற்காக உதவி கரங்களை காத்து பரிதவித்து நிற்கிறது.
நிதியுதவியை அனுப்பவேண்டிய வங்கி கணக்கு விவரம்:-
SURANYA.K
Ac 67313199649
Ifc SBIN0071190
GPAY 9656705400
BRANCH:- SBI PERUMKADABILA
இவருக்கு கடந்த 14 ஆம் தேதி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு நடைபெற்றது இந்த நிலையில் பணம் இல்லாத காரணத்தால் 27 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion