மேலும் அறிய

kallakurichi violence: 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.. 91 % பள்ளிகள் இயங்கியது.. - முழுவிவரம்..!

தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகள் இயங்க வில்லை எனத் தெரிய வந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு ஒரு தற்கொலை என பள்ளி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்ட நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப்போராட்டம் நேற்று கலவரமாக வெடித்தது. பள்ளியின் உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். 

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த 500 க்கும் மேற்பட்ட போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் இன்று முதல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயங்காது என்றும் பள்ளிக்கு நஷ்டஈடு தருவதோடு, தனியார் பள்ளிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை 

இந்த நிலையில் பள்ளி இயக்குநரகம் சார்பில், மூடப்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் இன்று தனியார் பள்ளிகள் திறக்கப்படுமா படாதா என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் அது குறித்தான விவரத்தை மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 

இன்று இயங்கிய, இயங்காத பள்ளிகளின் விவரம் 

அதில் தமிழகத்தில் மொத்தமுள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. 38 மாவட்டங்களில் உள்ள 987 தனியார் பள்ளிகள் இயங்க வில்லை. இந்த விவரத்தின் படி கிட்டத்தட்ட 91 சதவீத பள்ளிகள் வழக்கம் போல இயங்கி உள்ளன.


kallakurichi violence: 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.. 91 % பள்ளிகள் இயங்கியது..  - முழுவிவரம்..!

 

குறிப்பாக காஞ்சிபுரம், நாமக்கல், சிவகங்கை ,விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கி உள்ளன. தர்மபுரியில் உள்ள 190 பள்ளிகளில் 31 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளன. 


kallakurichi violence: 987 தனியார் பள்ளிகள் இயங்கவில்லை.. 91 % பள்ளிகள் இயங்கியது..  - முழுவிவரம்..!

நாமக்கல்லில் 216 பள்ளிகளில்  70 பள்ளிகள் மட்டுமே இயங்கி உள்ளன. கலவரம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 167 பள்ளிகளில்  153 பள்ளிகள் இயங்கி உள்ளன. சென்னையில் 689 பள்ளிகளில் 684 பள்ளிகள் இயங்கி உள்ளன. இந்த நிலையில் தற்போது தனியார் பள்ளிகளின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம் தொடங்கியது: கண்ணீரில் தொண்டர்கள் !
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget