மேலும் அறிய

ஸ்மார்ட் ரேஷன் கார்டு: 2 மாதத்தில் 7 லட்சத்தை கடந்த விண்ணப்பங்கள்!

விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்திருந்தது.

கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதன் மூலம் அரசின் பல சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கிறது. கொரோனா நிவாரண நிதி முதல் அரசின் பல்வேறு திட்டங்களை சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ரேஷன் கார்டை பெறுவதற்கு கடினமாக இருந்த நிலையில், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர்கள் விவரம் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உணவு வழங்கல் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த  மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1,26,414 பேர், ஜூன் மாதத்தில் 1,57,497 பேர், ஜூலை மாதத்தில் 2,61,529 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தென் சென்னையில் 49920 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 15687 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2041 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது. 

வட சென்னையில் 41431 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 16608 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில், 15054 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 1554 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 43,647 பேர் விண்ணப்பித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 38,295 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 15687 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2041 பேருக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்மார்ட் ரேஷன் கார்டு: 2 மாதத்தில் 7 லட்சத்தை கடந்த விண்ணப்பங்கள்!

முன்னதாக, கடந்த மாதம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இணையவழியில் புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் அவற்றில் உள்ள சிரமங்களை இணையவழியில் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நியாய விலைக்கடைகளில் புகார் பதிவேடு முறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணைய வழி புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புகார் பதிவேட்டு முறையை உடனடியாக அமல்படுத்த நுகர்பொருள் வழங்கல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

தலைப்பு செய்திகள்

விளைநிலத்திலேயே கரும்புகளை டிராக்டர் கொண்டு அழிக்கும் அவலநிலை - விழுப்புரம் விவசாயிகள் கண்ணீர் !
விளைநிலத்திலேயே கரும்புகளை டிராக்டர் கொண்டு அழிக்கும் அவலநிலை - விழுப்புரம் விவசாயிகள் கண்ணீர் !
விவசாயிகளுக்கு குட் நியூஸ்: விழுப்புரத்திற்கு வந்தடைந்தது 1,337 மெட்ரிக் டன் ‘ஃபேக்ட்’ உரம்; உரக்கடைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
விவசாயிகளுக்கு குட் நியூஸ்: விழுப்புரத்திற்கு வந்தடைந்தது 1,337 மெட்ரிக் டன் ‘ஃபேக்ட்’ உரம்; உரக்கடைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
12 மணல் குவாரிகள் திறக்க திட்டமா? - அன்புமணி இராமதாஸ் கடும் எதிர்ப்பு!
12 மணல் குவாரிகள் திறக்க திட்டமா? - அன்புமணி இராமதாஸ் கடும் எதிர்ப்பு!

வீடியோ

Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
பெண்களை துரத்தும் தவெக நிர்வாகிகள்.. தூங்குகிறதா சிங்கப்பெண் படை? கேள்வி கேட்கும் நயினார் நாகேந்திரன்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
Embed widget