மேலும் அறிய

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 6 சுவாமி சிலைகள் விரைவில் தமிழகம் வருகை - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பேட்டி

உலோக  சிலைகள் பாதுகாப்பு  மையங்கள் தமிழகத்தில் மேலும் சில இடங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளது என ஜெயந்த் முரளி தெரிவித்துள்ளார்

தமிழகத்திலுள்ள கோயில்களில் உள்ள சிலைகள் போதுமான பாதுகாப்பு இல்லாததால் ஏராளமான சிலைகள் திருட்டு போனது. இதனையடுத்து சிலை கடத்தல் பிரிவு போலீசார், திருட்டு போன சிலைகளை மீட்டும்,  பாதுகாப்பாற்ற நிலையிலுள்ள கோயில்களில் உள்ள சிலைகளை மீட்டு, பாதுகாப்பான மைத்தில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உலோக திருமேனி பாதுகாப்பு மையம் என கோயிலின் மூலவர் சன்னதி அருகில் கட்டப்பட்டு, தற்போது திருடப்பட்டு மீட்கப்பட்ட சிலைகளை மீட்டு மையத்தில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.


வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 6 சுவாமி சிலைகள் விரைவில் தமிழகம் வருகை - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பேட்டி

கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகமான கோயில்கள் இருப்பதால், மேலும் சில உலோக திருமேனி பாதுகாப்பு மையம் கட்டப்படவேண்டும் என அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.அதன்படி தலா ரூ. 50 லட்சம் மதிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலிலும், திருநாகேஸ்வரம் கோயிலிலும் அனைத்து வசதிகளுடன் , நவீன முறையில் பாதுகாப்பான வகையில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்நிலையில்,சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள,சிலைகள் பாதுகாப்பு மையத்தை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில், சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் ஒப்படைக்கப்படும் பல்வேறு கோயில்களின் ஐம்பொன் சிலைகள், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் செயல்படும் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழனி முருகன், வெளி நாட்டிலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன.


வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 6 சுவாமி சிலைகள் விரைவில் தமிழகம் வருகை - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பேட்டி

இந்த பாதுகாப்பு மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு பகலாக கோயில் ஊழியர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சிலைகள் பாதுகாப்பு மையத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி. ஜெயந்த் முரளி  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சிலைகள் பதிவேட்டின் படி சரியாக உள்ளதா ஆய்வு செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டது.


வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 6 சுவாமி சிலைகள் விரைவில் தமிழகம் வருகை - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பேட்டி

பின்னர்  ஜெயந்த்முரளி நிருபர்களிடம் கூறுகையில், சிலைகள் திருட்டு தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவு படுத்துவதற்காகவும், கும்பகோணத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டு பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகளில் 6 சிலைகள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்கப்படும் சிலைகள் உரிய கோயில்களில் ஒப்படைக்கப்படும். சிலை கடத்தலில் ஈடுபட்ட சுபாஷ் சந்திர கபூர் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் துறையை பலப்படுத்த கூடுதலாக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலும் உலோக  சிலைகள் பாதுகாப்பு  மையங்கள் தமிழகத்தில் மேலும் சில இடங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
Embed widget