![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மரக்காணம் பகுதியில் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலும் சேதம்: விவசாயிகள் கவலை!
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபடியாக மரக்காணம் பகுதியில் 5000 ஏக்கர் நெல் பயிர் சாகுபடி முற்றிலும் சேதம்
![மரக்காணம் பகுதியில் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலும் சேதம்: விவசாயிகள் கவலை! 5000 acres of paddy cultivation in Villupuram district mostly in Marakkanam area was completely damaged மரக்காணம் பகுதியில் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலும் சேதம்: விவசாயிகள் கவலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/11/9ac722165894d008b84281780625406b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு விடிய, விடிய கனமழை சென்னையில் கொட்டித்தீர்த்தது. பின்னர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்றுமுன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டது. இந்த நிலையில், தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடற்கரை பகுதியை இன்று காலை 11 மணியளவில் நெருங்க உள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியிலும், மாமல்லபுரம் அருகே இன்று கரையை கடக்கக்கூடும். இதன்காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை முதல் தரைக்காற்று மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சலையானது ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெல்ல பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் அங்குள்ள சுமார் 5000ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த காணிமேடு கிராமத்தில் இருந்து புதுப்பேட்டை, அகரம், மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சலையானது ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெல்ல பெருக்கால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மற்றும் அங்குள்ள சுமார் 5000ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.
#JUSTIN | சென்னை: வெள்ளத்தில் மூழ்கிய வடபழனி- கோயம்பேடு செல்லும் சாலைhttps://t.co/wupaoCQKa2 #ChennaiRains #Chennai #TamilNaduRains pic.twitter.com/w77e0vKAfY
— ABP Nadu (@abpnadu) November 11, 2021">
இதனால் புதுப்பேட்டை அகரம் மண்டகப்பட்டு ஆகிய கிராமங்களில் இருக்கும் மக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு வழியாக 25 கிலோமீட்டர் சுற்றி மரக்காணம் வருகின்றனர் ஓங்கூர் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரானது மரக்காணத்தில் உள்ள கிராமத்தின் வழியாகச் சென்று பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் கலந்துவிடும். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஓடையில் தூர்வாரப்படாமல் இருந்ததால் நீரானது விளை நிலங்களுக்குள் புகுந்து 5000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்தது.
மேலும் காணிமேடு அடுத்துள்ள சுற்றுவட்டார கிராமங்களுக்கு போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு தொடர்ந்து மழை காலங்களில் நடைபெறுவது வழக்கம் இருப்பினும் அதிகாரிகள் தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது 5000 ஏக்கர் நெல் பயிர் சாகுபடி முற்றிலும் சேதமானது இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
Tamil Nadu Rains LIVE: பருவமழை - சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)