மேலும் அறிய

Tigers Death: மூன்று நாட்களில் இரண்டாவது புலி மரணம் - காரணம் என்ன? முதுமலை புலிகள் சரணாலயத்தில் என்ன பிரச்னை?

Tigers Death: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாட்களில் இரண்டு புலிகள் உயிரிழந்து இருப்பது, வன உயிர் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tigers Death: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாட்களில் இரண்டு புலிகள் உயிரிழக்க, காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதுமலை புலிகள் சரணாலயம்:

தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரியில் 681 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள், மயில்கள் மற்றும் நரிகள் என பல்வேறு விதமான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. தற்போதே அங்கு கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளதால், 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், விலங்குகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், முதுமலை காப்பகத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயங்களுடன் பெண் புலி சடலம்: 

கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை மற்றும் பென்னைக் காப்புக்காடு பகுதியில் கடந்து 3ம் தேதி, வனத்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொத்தமடவு பகுதியில் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். உடனடியாக கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உயிரிழந்த பெண் புலிக்கு, புலி நெஞ்சு பகுதியில் காயம் இருந்ததுடன், உட்பகுதியில் ரத்த கசிவுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதோடு, கடந்த சில நாட்களாக புலி உணவு உட்கொள்ளாத நிலையில், அதன் இரைப்பையில் அதிக அளவில் குடல் புழுக்களும் இருந்துள்ளன. மேலும், புலிக்கு காயம் ஏற்பட்டது எப்படி என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு 

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, முதுமலை காப்பகத்தில் மேலும் ஒரு ஆண் புலி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எடக்காடு பகுதியில் அந்த புலி இறந்து கிடந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மூன்று நாட்களில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற புலிகளால் தாக்கப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும்  விலங்குகள் தாக்கி இருக்குமா? மனிதர்கள் ஏதேனும் தாக்குதல் நடத்தினார்களா? அல்லது ஏதேனும் நோய்வாய்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முதுமலையில் புலிகளின் எண்ணிக்கை:

2018ம் ஆண்டு நிலவரப்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 103 புலிகள் இருந்தன. வனத்துறையின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக 2022ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 114 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஐந்து புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்கு அடுத்தடுத்து புலிகள் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்திலும் தெப்பக்காடு வனப்பகுதியில் ஒரு பெண்புலி உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த 2023ம் ஆண்டில் 40 நாட்களில் 6 புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தது நினைவுகூறத்தக்கது.

புலிகளின் முக்கியத்துவம்:

சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புலிகள் முக்கியமான உயிரினமாகும்.  ஏனெனில்அவை தாவரவகைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.  இது நிலத்தையும் பிற உயிரினங்களையும் பாதுகாக்கிறது. உதாரணமாக வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்த புலிகள் மான் போன்ற தாவரவகைகளை சாப்பிடுவதன் மூலம், தாவரவகை எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. தாவர உண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், புலிகள் அதிகப்படியான மேய்ச்சலையும் நிலத்தின் சீரழிவையும் தடுக்க உதவுகின்றன.

நில சீரழிவை தடுப்பதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு தண்ணீரை வழங்கும் நீர்நிலைகளை அப்படியே வைத்திருக்க புலிகள் உதவுகின்றன. இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான பிற உயிரினங்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க புலிகள் உதவுகின்றன. புலிகளின் வாழ்விடங்கள் மற்ற காடுகளை விட அதிக கார்பனை சேமித்து வைக்கின்றன, இது காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புலியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் உயிரிழப்பை தடுக்க, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் அதற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனபதே, வன உயிர் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
TVK Meeting Issue: தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; புதுச்சேரியில் பரபரப்பு
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
IND Vs SA T20: ஃபார்மின்றி தவிக்கும் கில், ஸ்கை.. ஹர்திக் கம்பேக்? இன்று முதல் டி20 - தெ.ஆப்., வீழ்த்துமா இந்தியா?
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈட்டிய விடுப்பு சரண் பணப்பலன்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்.?அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Trump Vs Zelensky: “ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
“ஜெலன்ஸ்கி போரை நிறுத்த விரும்பல“-ட்ரம்ப்; நீங்களே ஆயுதங்கள சப்ளை பண்ணிட்டு இப்படி சொல்லலாமா.?
Embed widget