TN government officials suspended : ஒரே நாளில் டெண்டர்.! வெளியான முறைகேடு- அதிகாரிகளை தூக்கியடித்த தமிழக அரசு- நடந்தது என்ன.?
TN government officials suspended: காஞ்சிபுரத்தில் டெண்டர் முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் 2 அரசு அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

டெண்டர் முறைகேடு- வெளியான புகார்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து தமிழக அரசு எந்தவித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் தூய்மையான ஆட்சி அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி கட்டுவதற்காக டெண்டரில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஆதரங்களும் வெளியாகியது. இந்த நிலையில் இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனர் ஆர்த்தி வெளியிட்டுள்ள உத்தரவில்,
டெண்டர் முறைகேடு- நடந்தது என்ன.?
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட காரைப்பேட்டை குக்கிராமத்தில் 2025.26 ஆண்டு 15வது மான்ய நிதி திட்டத்தின் கீழ் ரூ.16.83 இலட்சம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்காக நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்த புள்ளி 19.06.2026 அன்று கோரப்பட்டது. இந்நிகழ்வில் குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பானது 12.05.2026 முதல் 19.05.2026 வரை கோரப்பட்டு காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக தகவல் பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
ஒப்பந்த விதிமுறைகளின்படி 12.05.2020 முதல் ஒப்பந்த்தாரர்கள் பதிவிறக்கம் செய்திட ஏதுவாக ஒப்பந்த புள்ளி பதிவேற்றம் செய்திருக்கபட வேண்டும். இந்நிலையில் ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக 8.05.2026 அன்று ஒப்பந்த புள்ளி உருவாக்கி 9.05.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
2 அதிகாரிகள் சஸ்பெண்ட்
மேற்படி குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி அனுமதி பெறாமல் ஒப்பந்த அழைப்பு கோரியமைக்கும். ஒப்பந்தப்புள்ளி விதிமுறைகள் மீறியமைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் உத்தரவின் படி, அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கே. சாந்தி, முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் தற்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் மற்றும் எல்.கயல்விழி உதவி பொறியாளர், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















