மேலும் அறிய

மே மாதத்தில் 10 ஆயிரம் பேரின் உயிரைப் பறித்த கொரோனா தொற்று : அச்சத்தில் மக்கள்

2020 ஆகஸ்ட் மாதத்தில் 3,387 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததே, மாதத்தின் அதிக உயிரிழப்பாக இருந்தது. தற்போது, ஒரே மாதத்தில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலையால் தமிழ்நாட்டில் மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. இந்த தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

594 டாக்டர்களை காவு வாங்கிய 2வது அலை; தமிழகத்தில் 21 டாக்டர்கள் பலி!

இந்நிலையில்,  கொரோனா இரண்டாவது அலையால் தமிழ்நாட்டில் மே மாதத்தில் மட்டும் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல் மாதத்தில் வேகமாக பரவத் தொடங்கியது. மே மாதத்தில் உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக மே மாதத்தில் மட்டும் 10,186 பேர் உயிரிழந்துள்ளனர்.


மே மாதத்தில் 10 ஆயிரம் பேரின் உயிரைப் பறித்த கொரோனா தொற்று : அச்சத்தில் மக்கள்

மே மாதம் உயிரிழப்பு

1-5-2021 - 147 பேர் 

2-5-2021 -  153 பேர்

3-5- 2021 - 122 பேர்

4-5-2021 - 144 பேர்

5-05-2021 - 167 பேர்

6-05-2021 - 195 பேர்

7-05-2021 -  197 பேர்

8-05-2021 -  241 பேர்

9-05-2021 - 236 பேர்

10-05-2021 - 232 பேர்

11-05-2021 - 298 பேர்

12-05-2021 - 293 பேர்

13-05-2021 - 297 பேர்

14-05-2021 -  288 பேர்

15-05-2021 - 303 பேர்

16-05-2021 - 311 பேர்

17-05-2021 -  335 பேர்

18 -05-2021 - 364 பேர்

19-05-2021 - 365 பேர்

20 -05-2021 - 397 பேர்

21-05-2021 -   467 பேர் 

22-05-2021 - 448 பேர்

23-05-2021 - 422 பேர்

24-05-2021 - 404 பேர்

25-05-2021 - 468 பேர்

26-05-2021 -   475 பேர்

27-05-2021 -   474 பேர்

28-05-2021 - 486 பேர்

29-05-2021 - 486 பேர்

30-05-2021 - 493 பேர்

31-5-2021 - 478 பேர்

கடந்த 1ஆம் தேதியில் இருந்து 7ஆம் தேதி உயிரிழப்பு 200க்குள் இருந்தது. 8ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதிக்குள் 300க்குள் இருந்தது. 15ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிக்குள் 400க்குள் இருந்தது. 21ஆம் தேதியில் இருந்து 31-ஆம் தேதி வரை 400க்கு மேல் பதிவாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு மார்ச் முதல் 2021ஆம் ஏப்ரல் வரை 14,046 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். ஆனால், இந்தாண்டு மே மாதத்தில் மட்டும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டுள்ளது. மொத்த உயிரிழப்பில் 42 சதவீதம் பேர் மே மாதத்தில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆகஸ்ட் மாதத்தில் 3,387 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததே, மாதத்தின் அதிக உயிரிழப்பாக இருந்தது. தற்போது, ஒரே மாதத்தில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி - அப்படி என்ன ஸ்பெஷல் ?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
Embed widget