மேலும் அறிய

Corona Cases : தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு விதிமீறல் வழக்குகள் : ஒரே உத்தரவில் இத்தனை லட்சம் வழக்குகள் வாபஸ்?

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தொடரப்பட்ட ஊரடங்கு விதிமீறல்கள் தொடர்பான 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே உத்தரவு; 10 லட்சம் வழக்குகள் வாபஸ் 

தமிழகத்தில் கொரோனா காலத்தில் தொடரப்பட்ட ஊரடங்கு விதிமீறல்கள் தொடர்பான 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு விதிமீறல்:

தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டதற்குப் பிறகு ஊரடங்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளையும் விதிகளையும் அமல்படுத்தி இருந்தன. ஆனால், ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோதே, லட்சக்கணக்கானோர் விதிமீறல்களில் ஈடுபட்டனர்.பலர் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக விதிகளை மீறினா். பலர் என்ன நடக்கிறது என வேடிக்கை பார்ப்பதற்காக சாலைகளில் வந்தும் வாகனம் ஓட்டியும் விதிகளை மீறினர். இது போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வந்தனர்.

2 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேல் வழக்கு:

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற தீவிர கொரோனா கால வழக்குகள் 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும். இந்தச் சூழலில், கடந்த சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பே, அப்போதைய முதலமைச்சர் தென்காசி கூட்டமொன்றில் பேசும்போது, கொரோனா கால வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து இருந்தார். ஆனால், நடைமுறைக்கு அது வந்ததாகத் தெரியவில்லை. 

வழக்குகள் வாபஸ்- டிஜிபி

அதன் பின் தேர்தல் நடைபெற்று, ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இந்தச் சூழலில், கொரோனா கால வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் அடிப்படையில், தற்போது தமிழக காவல்துறை தலைவரான  டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், ஊரடங்கு அமலில் இருந்த கொரோனா காலகட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், வதந்தி பரப்பியவர்கள், உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டவர்கள் ஆகியோர் மீது போடப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகளையும் அந்தந்த மாவட்ட போலீசார் வாபஸ் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

வாபஸ் பெறப்பாடாத வழக்குகள்:

ஆனால், அந்தச் சமயத்தில், முறைகேடாக “இ பாஸ்” பெற்றவர்கள், வன்முறையில் ஈடுபட்டவர்கள், போலீசாரைப் பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படாது என திட்டவட்டமாக அந்த சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:

எது எப்படி இருப்பினும், ஓர் உத்தரவில் 10 லட்சம் வழக்குகள் வாபஸ் என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதலாம். தமிழகத்தில் ஏற்கனவே, ஒரே கையெழுத்தில் பல லட்சம் அரசு ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget