மேலும் அறிய

"எப்பொழுதும் வேலை என இருக்காமல் குடும்பத்துடனும் நேரம் செலவிடவேண்டும்" : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.

மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று செயல்பட்டால் இளைய வழக்கறிஞர்களுக்கு வாழ்வில் வெற்றி நிச்சயம்.

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 59 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. மேலும் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உலகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து சேலம் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மரக்கன்று நட்டனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியினை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் சேலம் சரக டி ஐ ஜி ராஜேஸ்வரி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, "உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சேலம் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு புதிதாக கட்டப்பட உள்ள 16 நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டால் இந்தியாவிலேயே சேலம் நீதிமன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது என்றும், நீதிமன்றங்கள் முன்பெல்லாம் காகிதத்தால் எழுதுகின்ற வகையில் செயல்பட்டு இருந்தது. தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தினால் அனைத்து நீதிமன்றங்களிலும் காகிதம் இல்லாமல் செயல்படும் நிலைமை வந்துள்ளது. எனவே அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

இவ்வாறு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டிடத்தை கட்டினால் முதன்மை நீதிமன்றமாக திகழும் மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனை பெற்று இளைய வழக்கறிஞர்கள் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். இளைய வழக்கறிஞர்களுக்கு அனுபவம் இருக்காது. எனவே மூத்த வழக்கறிஞர்களிடம் அனுபவங்களை இளைய வழக்கறிஞர்கள் கற்றுக் கொண்டு செயல்பட்டால் அதிக நேரம் செலவிட்டு குறைந்த பணம் சம்பாதிப்பதை விட குறைந்த நேரம் செலவிட்டு அதிக பணம் சம்பாதிக்கலாம். கடினமாக உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். எப்பொழுதும் வேலை என்று இருக்காமல் குடும்பத்துடனும் நேரம் செலவிட வேண்டும். அப்போது மகிழ்ச்சி ஏற்பட்டு வேலை செய்யும்போது எந்தவித தடங்களும் இல்லாமல் சிறப்பாக பணிகள் செய்திட முடியும்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget