மேலும் அறிய

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?

மக்களவையில் இருந்து வெளியேறியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் கீழே விழுந்த பா.ஜ.க. எம்.பி.க்கு தலை உடைந்து ரத்தம் வழிந்தது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மக்களவைத் தொடங்கிய உடனே இந்த விவகாரம் குறித்து அவையில் அமளி ஏற்பட்டது. இதனால், அவையை ஒத்திவைப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 

பா.ஜ.க. எம்.பி.க்கு மண்டை உடைந்தது:

இதன் காரணமாக, மக்களவையில் இருந்து ஒரே நேரத்தில் எம்.பி.க்கள் வெளியேறும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது, பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவரது தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து, சக எம்.பி.க்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தலையில் அடிபட்ட எம்.பி. பிரதாப் சாரங்கி, தான் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது ராகுல்காந்தி தன் மீது எம்.பி. ஒருவரை தள்ளிவிட்டதாகவும், அதன் காரணமாகவே தான் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகவும் கூறினார். நாடாளுமன்ற வளாகத்திலே எம்.பி. ஒருவர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிய தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமித்ஷா பேசியது என்ன?

கடந்த செவ்வாய் கிழமை மக்களவையில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, அவர் “இப்போது அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்ற அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால் ஏழு பிறவிகளுக்கு நாம் சொர்க்கத்தை அடையலாம் என்றார்.

அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை மக்களவையில் ஏற்படுத்தியது. மேலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். மேலும், அமித்ஷா தன்னுடைய பேச்சில் நாட்டின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ஏன் ராஜினாமா செய்தார்? பட்டியலின சாதி மற்றும் பழங்குடியினரை அப்போதைய அரசு நடத்திய விதம் பிடிக்காமலும், அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததாலும் அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார் என்றார்.

நாடு முழுவதும் குவியும் கண்டனம்:

அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அம்பேத்கர் மனுநீதிக்கு எதிராக இருந்தார். அதன் காரணமாகவே அவர்மீது இவ்வளவு வெறுப்பு பா.ஜ,.க.விற்கு இருப்பதாக காங்கிரஸ் அமித்ஷாவை விமர்சித்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்பேத்கரை நாங்கள் என்றும் மதிக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து இன்று தி.மு.க. போராட்டம் நடத்தி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget