மேலும் அறிய

தருமபுரியில் புளி விற்பனையை பெருமாள் கோவிலில் பூஜை தொடங்கிய வியாபாரிகள்

புது புளிகளை ஜனவரி மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்ய வேண்டுமென தீர்மானித்த பிறகு புளிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.

தருமபுரியில் நடப்பாண்டிற்கான புளி விற்பனையை பெருமாள் கோவிலில் பூஜை செய்து வியாபாரிகள் தொடங்கினர்.
 
தருமபுரி மாவட்டம் முழுவதும் புளி அதிகமாக விளைச்சல் அடைந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புளியை சுத்தப்படுத்தும் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் புளியை கொள்முதல் செய்து சுத்தம் செய்து வருகின்றனர். இதற்காக தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கின்ற புளியை தவிர்த்து, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புளியை கொள்முதல் செய்து சுத்தப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். இது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் புளி கொள்முதல் செய்யப்படுவதால், புளி சுத்தப்படுத்தும் தொழில் செய்து வரும் தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் போதிய வருவாய் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதனால் தருமபுரி புளி வியாபாரிகள் சங்கத்தினர் ஆண்டுதோறும் புது புளிகளை மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்ய வேண்டும். அதுவரை பழைய புளிகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் புளி வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.

தருமபுரியில் புளி விற்பனையை பெருமாள் கோவிலில் பூஜை தொடங்கிய வியாபாரிகள்
 
இதனையடுத்து இந்த ஆண்டிற்கான புளி கொள்முதல் மற்றும் விற்பனையை வியாபாரிகள் சங்கத்தினர் தருமபுரி கோட்டை பெருமாள் கோயில் மற்றும் பாப்பாரப்பட்டி பெருமாள் கோயிலில் பூஜை செய்து விற்பனையை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண்டுதோறும் புளி விற்பனையை மார்ச் மாதத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக கொள்முதல் செய்தால் வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே புலி கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மார்ச் மாதத்திற்கு மேல் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

தருமபுரியில் புளி விற்பனையை பெருமாள் கோவிலில் பூஜை தொடங்கிய வியாபாரிகள்
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புளி வியாபாரிகள் சங்க தலைவர் பச்சமுத்து பாஸ்கர், “தருமபுரி மாவட்டத்தில் புளி கொள்முதல் செய்து, அதனை சுத்தம் செய்யும் பணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த புளி சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் 90 சதவீதம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தருமபுரி மாவட்டத்தில் 20 சதவீதத்திற்கு மேல் புளிகள் கிடைக்கிறது. ஆனால் பல்லாயிரம் டன் கணக்கில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் இதில் தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை இருந்து வந்தது. தற்பொழுது தருமபுரி புளி வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் புது புளி வருகின்ற வரை, பழைய புளிகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் புது புளிகளை ஜனவரி மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்தில் கொள்முதல் செய்ய வேண்டுமென தீர்மானித்த பிறகு புளிக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைக்கிறது” என தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட புளி வியாபாரிகள் மற்றும் புளி சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும்- முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ்!
தலைகால் புரியாமல் ஆடுவதா? பதவி வந்ததும் பணிவு வரணும்- முதல்வர் விஜயை வெளுத்தெடுத்த ஈபிஎஸ்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
சேலத்தில் கோலாகல கலைத்திருவிழா; காத்திருக்கும் பரதம், ஓவியம், சிற்ப நிகழ்ச்சி - எப்போது? எங்கே?
சேலத்தில் கோலாகல கலைத்திருவிழா; காத்திருக்கும் பரதம், ஓவியம், சிற்ப நிகழ்ச்சி - எப்போது? எங்கே?
வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் - வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சியான தவெகவினர்
வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் - வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சியான தவெகவினர்

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டிங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
Embed widget