மேலும் அறிய

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 22,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது

’’மழை குறைந்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்’’

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து காவிரி ஆற்றில் இரண்டு அணைகளிலும் சேர்த்து குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனாலும் வட கிழக்கு பருவமழையால் தமிழ்நாடு கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கன அடி வரை உயர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
 

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 22,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது
 
 
தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை, சற்போது குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரங்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுக்கு நீர்வரத்து மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக இருந்தது. ஆனால் இன்று காலை நீர்வரத்து மீண்டும் குறைந்து வினாடிக்கு 17,000 கன அடியாக இருந்து வருகிறது. தொடர்ந்து நீர்வரத்து சரிந்தாலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் மழை குறைந்து வருவதால் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

 
பாப்பாரப்பட்டி அருகே பிக்கப் வாகனத்தை திருடியதாக 2 பேர் கைது 
 
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாமரத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் டாட்டா ஏசி பிக்கப் வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு,  இரவு தனது வீட்டின் முன்பு வழக்கம் போல் வாகனத்தை நிறுத்திவிட்டு இருந்துள்ளார். தொடர்ந்து தூங்கி எழுந்து மறுநாள் காலையில் பார்க்கும் போது, வீட்டு முன்னாடி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிக்கப் வாகனம் காணவில்லை. இந்த வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் பச்சையப்பன் புகார் அளித்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் வாகன பதிவு எண் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
 

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 22,000 கன அடியிலிருந்து 17,000 கன அடியாக சரிந்தது
 
இந்நிலையில் பச்சைப்பன் வீட்டு முன்பு இருந்த வாகனத்தை திருடிச் சென்றது, எட்டிக்குட்டை பகுதியைச் சார்ந்த பெருமாள், அருள் என்பது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில், திருடிச் சென்று வாகனத்தை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கார்பேட்டை அருகே பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பெருமாள், அருள் இருவரையும் பாப்பாரப்பட்டி காவல் துறையினர் கைது செய்து, திருடிச் சென்ற பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும்  பாப்பாரப்பட்டி பகுதியில் வீட்டருகே நிறுத்தி வைத்த இருந்த பிக் அப் வாகனம் இரவு நேரத்தில் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget