மேலும் அறிய

சேலம் : மருத்துவப்படிப்புகான 7.5 % இடஒதுக்கீட்டில் விடுபட்ட 18 மாணவர்களின் பெயர்கள் சேர்ப்பு

மருத்துவபடிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேலத்தை சேர்ந்த விடுபட்ட 18 மாணவர்களில் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி.

மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குற்றம் சாட்டினர். சேலம் மாவட்டத்தில் உள்ளது 18 மாணவர்களின் பெயர்கள் நீட் பட்டியலில் இடம் பெறவில்லை என ஏபிபி செய்தி வெளியிட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் விடுபட்ட 18 மாணவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

சேலம் : மருத்துவப்படிப்புகான 7.5 % இடஒதுக்கீட்டில் விடுபட்ட 18 மாணவர்களின் பெயர்கள் சேர்ப்பு

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரிக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிச்சாமியின் மகள் கஸ்தூரி, ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து விட்டு 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வெளியான தரவரிசை பட்டியலில் குளறுபடி நடந்துள்ளதாக கஸ்தூரி குற்றம் சாட்டி உள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம் பெற எம்பிசி பிரிவில் 230 மதிப்பெண்கள் பெற்றாலே போதுமானது. ஆனால் கஸ்தூரி 252 மதிப்பெண்கள் பெற்றும் இவரது பெயர் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் பெறாமல் பொது பிரிவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், 230 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயர்கள் இட ஒதுக்கீடு பட்டியிலில் இடம்பெற்றுள்ள போது 252 மதிப்பெண்கள் பெற்ற தனது பெயர் இடம்பெறவில்லை என கூறி கஸ்தூரி தனது பெற்றேருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மருத்துவம் பயின்று ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற தனது கனவு நிறைவேற தமிழக அரசு அறிவித்த படி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். 

சேலம் : மருத்துவப்படிப்புகான 7.5 % இடஒதுக்கீட்டில் விடுபட்ட 18 மாணவர்களின் பெயர்கள் சேர்ப்பு

பாதிக்கப்பட்ட மாணவி கஸ்தூரி கூறுகையில், சிறுவயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என இரவு பகல் பாராமல் படித்து வந்தேன். மருத்துவ படிப்பிற்கு தனியார் கல்லூரிகளில் பல லட்சம் செலவாகும். எனவே அரசு அறிவித்தபடி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் எனது பெயர் சேர்த்து, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் எனது மருத்துவ கனவு கலைந்துவிடும். எனவே நீட் புது பட்டியலில் இருந்து தனது பெயரை அரசு அறிவித்தபடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெயரை சேர்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை உதவி கல்வி அலுவலரிடம் கேட்டபோது, சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது, இதுகுறித்து உயர் கல்வித் துறைக்கு தகவல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார். 

இன்று நடந்த முதலாம் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் 18 மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் வெளியாகியுள்ளது. முதலில் புகார் அளித்த கஸ்தூரி என்ற மாணவிக்கு 130 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பதினெட்டு மாணவர்களும் அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget