மேலும் அறிய

சேலம் : 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குறைதீர் கூட்டம்; ஒரேநாளில் மனுக்கள் மீது நடவடிக்கை...

ஒரேநாளில் ஆய்வு செய்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாநகராட்சி ஆணையாளர் அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

சேலம் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டம் நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் குவித்தனர். பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களுக்கு ஒரே நாளில் ஆய்வு செய்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மாநகராட்சி ஆணையாளர் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

 

சேலம் : 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குறைதீர் கூட்டம்; ஒரேநாளில் மனுக்கள் மீது நடவடிக்கை...
சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்டநாள் பிரச்சினைகள், கோரிக்கைகளை மனுவாக எடுத்து வந்து நேரடியாக மாநகராட்சி ஆணையரிடம் கொடுத்தனர். இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுவதால் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
குறிப்பாக சாலை வசதி சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்  போன்ற பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களாக வழங்கினர். இங்கு பொதுமக்களின் குறைகளை கணினி மூலமாக பதிவு செய்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. மேலும் பொதுமக்களிடம் வாங்கும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் ஒரை நாளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தை அடுத்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பொதுமக்களின் பிரச்சினைக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுத்து அடுத்த முறை மாநகராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அது குறித்து முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர்.

சேலம் : 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குறைதீர் கூட்டம்; ஒரேநாளில் மனுக்கள் மீது நடவடிக்கை...

சேலம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர் மற்றும் மேயர் நீண்ட நாட்களாக இல்லாத காரணத்தினால், சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டத்தை சமாளிக்கவும் உடனடியாக மாநகராட்சி பிரச்சனைகளை தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்து ராஜ், இன்று பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை நேரடியாக அந்தந்த பகுதி சென்று அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் மாறும் அடுத்த திங்கட்கிழமை குறைதீர் கூட்டம் நடைபெறுவதற்கு முன், கடந்த வாரம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை குறித்து விரிவான தகவல்களை அளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகிகளுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். மாநகராட்சி பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி நிர்வாக அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களின் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
Embed widget