மேலும் அறிய

மாம்பழங்களை ரசாயனம் கலந்து பழுக்க வைத்தால் நடவடிக்கை - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.

மாம்பழ சீசன் முடியும் வரை தொடர்ந்து சோதனை ஈடுபட உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சேலத்தில் எத்திலின் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 1500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாம்பழ சீசன் முடியும் வரை தொடர்ந்து சோதனை ஈடுபட உள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் ரசாயனம் மூலம் மாம்பழங்களை பழுக்க வைக்கப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது உமாபதி, குப்புசாமி என்பவர்களுக்கு சொந்தமான இரண்டு கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு எத்திலின் ரசாயனத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு கடைகளிலும் இருந்து 1500 கிலோ ரசாயனம் தெளித்த மாம்பழங்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக நியமன அலுவலர் தெரிவித்துள்ளார். 

மாம்பழங்களை ரசாயனம் கலந்து பழுக்க வைத்தால் நடவடிக்கை - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், அளவுக்கதிகமான ரசாயனங்களைப் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்த 2 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்து, மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கல் வைத்து பழுக்க வைப்பது, ரசாயனங்களை பயன்படுத்தி படுக்க வைப்பது போன்ற காரியங்களில் கடை உரிமையாளர்கள் ஈடுபடுவர். இவற்றை மக்கள் எளிதாக கண்டறியலாம். மாம்பழங்கள் மீது வெள்ளையாக பால் போன்று ஆங்காங்கே இருக்கும். இதுமட்டுமின்றி மாம்பழத்தின் மேல் மெழுகுபோன்ற தோற்றத்துடன் காணப்படும் மாம்பழங்களை மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

மாம்பழங்களை காயாக இருப்பதை வாங்கி தங்களது வீடுகளில் உள்ள அரிசி பாத்திரத்தில் வைத்து அல்லது வாழைப்பழம் மற்றும் ஏதேனும் பழம் பழுத்த நிலையில் இருந்தால் அதனுடன் மாம்பழத்தை வைத்து அடைத்து வைத்தால் ஓரிரு நாட்களில் மாம்பழம் பழுக்கத் தொடங்கிவிடும் என்றார். 

மாம்பழங்களை ரசாயனம் கலந்து பழுக்க வைத்தால் நடவடிக்கை - உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை.

மேலும் மாம்பழ சீசன் முடியும் வரை தொடர்ந்து அனைத்து கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள் குப்பை கிடங்குக்கு எடுத்துச்செல்லப்பட்டு அழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மாம்பழத்தின் வரத்து குறைவு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் போன்ற காரணங்களினால் மாம்பழங்களில் விலை உயர்ந்துள்ளது. எனவே எளிதில் விற்பனை செய்வதற்காக காயாக இருக்கும்போதே வாங்கி அதனை பதப்படுத்தி அதிக லாபத்திற்கு விற்பனை செய்வதற்காக மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? -கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
Embed widget