மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக குறைந்தது
தொடர்ந்து மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையும் என மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்
தமிழகத்திற்கு வரும் காவிரி நீர்
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு மாத காலமாக கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் குறைவாகவே இருந்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதும் ஆகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 10,000 கன அடியாக இருந்து வந்தது.
![தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக குறைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/09/114d1ea93ca51c2bc0e2453888dc97f8_original.jpg)
கடந்த சில தினங்களாக மீண்டும் மழைப்பொழிவு ஏற்பட்டதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, வினாடிக்கு 20,000 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து மழை குறைந்து வருவதால், நேற்று காலை வினாடிக்கு 17,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது. மேலும் நீர்வரத்து குறைந்து. இன்று காலை வினாடிக்கு 14,000 கன அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், ஒகேனக்கல் பகுதிகளில் தண்ணீர் தேக்கம் அடைந்து வருகிறது. தொடர்ந்து மழை பொழிவு குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையும் என மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தல் - 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
![தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக குறைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/09/39d27367c96125ea71fc1c743562abf7_original.jpg)
தருமபுரி மாவட்டத்தில் கஞ்சா கடத்துவதாக காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் ரங்கசாமி, தலைமையில் ஒட்டப்பட்டி பகுதியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளனர்.
![தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கனஅடியில் இருந்து 14,000 கன அடியாக குறைந்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/09/ffaa7613d6d6cd43ae7dacf3d0d92634_original.jpg)
இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து சோதனை செய்த போது, தருமபுரி பகுதியை சேர்ந்த சூர்யா, கேசவன் என்பதும், இருவரும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனால் இவர்கள் இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 2.500 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தொப்பூர் பகுதியில் ரூ.23 இலட்சம் மதிப்பிலான 3.5 டன் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion