மேலும் அறிய

Salem Temple Issue: சேலத்தில் இருதரப்பு மோதலால் இரண்டாவது நாளாக கடைகள் அடைப்பு

கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரியமாரியம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 5 மேற்பட்ட கடைகளுக்கு தீ வைத்தும், கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவம் நடைபெற்றபோது தீவட்டிப்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

Salem Temple Issue: சேலத்தில் இருதரப்பு மோதலால் இரண்டாவது நாளாக கடைகள் அடைப்பு

இந்த நிலையில் தீவட்டிப்பட்டி பகுதியில் பதட்டம் தனியாத நிலையில் அச்சத்தின் காரணமாக இரண்டாவது நாளாக இன்று கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கலவரம் ஏற்பட்ட தீவட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம், மாரியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரச்சனைக்குரிய பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆய்வு மேற்கொண்டார். இந்த மோதல் நடைபெற்றபோது எடுத்த வீடியோ காட்சிகளை வைத்து இதுவரையில் கலவரத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. மேலும் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் நாச்சினம்பட்டி, தீவட்டிப்பட்டி காலனி, பெரிய மாரியம்மன் கோவில் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் சேலம் தீவட்டிப்பட்டி பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட கடைகள் கலவரம் ஏற்பட்ட கிராமப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

Salem Temple Issue: சேலத்தில் இருதரப்பு மோதலால் இரண்டாவது நாளாக கடைகள் அடைப்பு

இதைத்தொடர்ந்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது, இந்த கலவரம் திட்டமிட்டு ரவுடி கூட்டத்தால் நடத்தப்பட்ட கலவரம். அரசியலுக்கும் ஜாதி, மதங்களுக்கும் அப்பாற்பட்டது. ஒரே கிராமத்தில் ஒரே குடும்பங்களாக நான்கைந்து சமூகங்கள் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு தரப்பிடமும் காவல்துறை அமைதி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு கூட்டம் வேண்டுமென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அமைதிபடுத்த முயற்சித்தபோது காவல்துறையினர் மீதும் கற்களை வீசிதாக்குதல் நடத்துகின்றனர். மேலும் திட்டமிட்டு கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். இதில் ஜாதி, மதம், இனம், மொழி இவற்றில் பாகுபாடு இல்லை. உரிய நடவடிக்கை காவல்துறை எடுத்துள்ளனர்.

இரண்டு தரப்பிலும் அப்பாவிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவில் பண்டிகை பார்ப்பதற்காக வந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் காவல்துறையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மிகுந்த வேதனை அடைவதாக கூறினார். இதற்காக மிகப்பெரிய கண்டனத்தை பதிவு செய்ய வந்துள்ளோம். இந்த கலவரத்திற்கு யார் காரணமானவர்களோ? அவர்கள் யாராக இருந்தாலும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும், இரண்டு தரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை காவல்துறையினர் விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார். அப்பாவி மக்கள் ஒருவர் கூட பாதிக்க கூடாது என்றும் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று பேசலாம் என்று இருந்தோம். ஆனால் காவல்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர். கலவரத்திற்கான பிரச்சினை அமைதியான பிறகு பட்டியலின மக்களை சந்தித்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறினார். இங்கு ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
EPS Slams DMK: ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
ரூ.1000-க்கு ஆசைப்பட்டு ரூ.1500-அ விட்டுட்டீங்களே.?! - மக்களிடம் மத்தியில் பேசிய இபிஎஸ் ஆதங்கம்
Velachery-Guindy Flyover: போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
போட்ரா வெடிய, தீரப்போகுது போக்குவரத்து நெரிசல்; வேளச்சேரி to கிண்டி புதிய மேம்பாலம் - முழு விவரம்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
Google's New Gmail Tool: அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
அப்பாடா நிம்மதி.! இனிமே தேவையில்லாத மெயில ஈசியா தட்டித் தூக்கிரலாம் - ஜி மெயிலில் புதிய டூல்
Tesla India Launch: இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
இந்தியாவில் கலக்க வரும் டெஸ்லா; முதல் மாடலான 'Y'-ல் இவ்வளவு வசதிகளா.!! விலை என்ன தெரியுமா.?
Iran Threatens Trump: ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
ஈரானிடமிருந்து கொலை மிரட்டல்; புன்னகையால் டீல் செய்த ட்ரம்ப் - நடந்தது என்ன தெரியுமா.?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
Embed widget