மேலும் அறிய

பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி - சேலத்தில் அதிர்ச்சி

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்து சமையல் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவு.

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கான மாணவ, மாணவிகள் விடுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். குறிப்பாக உணவு சமைக்கும் கூடம் கல்லூரிக்குள்ளே அமைந்துள்ளது. இங்கிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் மாணவ, மாணவிகள், இருவர் விடுதிக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு விடுதியில் இரவு உணவு தயாரித்து மாணவ, மாணவிகள் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டுள்ளது. அப்போது மாணவர்கள் விடுதியில் வழங்கிய உணவில் பல்லி இருந்ததை கண்டு மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் உணவில் பல்லியிருக்கும் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவைகளை வெளியிட்டனர். 

பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி - சேலத்தில் அதிர்ச்சி

இது தொடர்பாக தகவலறிந்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள் இன்றைய தினம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது மாணவர்கள், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் உணவு சமைக்கும் ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது மாணவர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி இருந்தது உறுதி செய்யப்பட்டது. கல்லூரி விடுதியில் உணவு தயாரிக்கும் சமையல் கூடம் திறந்தவெளியில் இருப்பதால் தற்காலிகமாக மூட வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேற்கொண்டு சமையல் கூடத்தில் முறையான வசதிகள் ஏற்படுத்திய பிறகு சமையல் கூடத்தை திறக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் இது தொடர்பாக தனியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேலத்தில் பல்லியை சேர்த்து சமைத்த உணவை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget