மேலும் அறிய

Salem Mango: மாம்பழ சீசன் வந்தாச்சு... மக்களே உஷார்... வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை.

சேலம் மாவட்டத்தில் மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதில் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளது. திருச்சி தொட்டியம், முசிறி, பரமத்திவேலூர், கரூர், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் உள்பட பல பகுதிகளில், வாழைமரங்கள் பல லட்சம் சாகுபடி செய்யப்படுகிறது. சமீப காலமாக பழங்கள், கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை சாப்பிடுவர்களுக்கு ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வயிறு எரிச்சல், தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இறுதியில் புற்றுநோய் கூட ஏற்படுகிறது. 

செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில், சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களில் மாம்பழம் சீசன் களைக்கட்டத் தொடங்கிவிடும். இந்த ஆண்டும் மாம்பழ சீசன் வந்துள்ளது. சீசனின் போது சேலம் மார்க்கெட்களில் டன் கணக்கில் மாங்காய் காய்களாக விற்பனைக்கு வருவது வழக்கம். இவை குடோன்களில் பழுக்க வைத்து, பின்னர் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், மாங்காய்களை விரைவாக பழுக்க வைக்க சில வியாபாரிகள் கால்சியம் கார்பைட் ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்தால், அந்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

இதுகுறித்து சேலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் பழங்களை வாங்கும் போது பார்த்து வாங்கவேண்டும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களில் சுவை, மனம், நிறம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். பழங்கள் மீது கருப்பு நிற வட்டம் காணப்படும். இவை விரைவில் அழுகிவிடும். பழத்தின் மேல் பகுதி ஆரஞ்சு கலரிலும், உள் பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். பழத்தை அறுக்கும் சொர, சொர வென சத்தம் கேட்கும். பழம் பழுத்த மாதிரி தெரியும். ஆனால் கொட்டியாக இருக்கும். இயற்கை முறையில் பழுக்கவைத்த பழம் 5 முதல் 7 நாட்களாகும். ஆனால், செயற்கை முறையில் பழுக்க வைத்த பழம் 2 முதல் 3 நாட்களில் பழுத்து விடும். அதை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் என கண்டறியலாம். அவ்வாறு செயற்கை முறையில், பழுக்க வைத்த பழங்களை உடலுக்கு வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல் கடைசி கட்டத்தில் புற்று நோய் கூட வர நேரிடும். வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால், பழங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படியும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது கண்டறிந்தால் பொது மக்கள் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
இரவு நேரப் பசியா? 24 மணி நேரமும் இயங்கும் ‘ரயில் கோச் ரெஸ்டாரன்ட்’ - எங்கு தெரியுமா?
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சேலத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு விமான சேவை தொடர்வதை நீட்டிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
அரசியல் களத்தில் ஆச்சரியம்! தவெக பட்ஜெட்டை பாராட்டித் தள்ளிய இடதுசாரி தலைவர் முத்தரசன்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget