மேலும் அறிய

சேலம்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட முக்கிய மனுக்கள்

அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் மீது நடவடிக்கை எடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்படும் மக்கள் குறைதீர் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது பிரச்சனையை மாவட்ட ஆட்சியரிடம் கூறி மனு அளித்தனர். சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த சாம்ராஜா பேட்டை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா ராஜேந்திரன் தம்பதியினர் இவர்களுக்கு சொந்தமான 27 சென்ட் நிலம் ஓமலூர் வட்டம் பாப்பம்பாடி கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த தாரமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் பொட்டு காரன் என்கிற சின்ன கண்ணு அவர்கள் முறைகேடாக ஆவணம் தயாரித்து கடந்த அதிமுக ஆட்சியில் அவரது குடும்பத்தார் பேருக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் அத்து மீறி உள்ளே நுழைந்து கட்டுமான பணிகளையும் மேற்கொண்டு உள்ளனர். இதுகுறித்து கௌசல்யா மற்றும் ராஜேந்திரன் தம்பதியினர் கேட்ட பொழுது அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த காவலர்கள் அதிமுக பிரமுகர்க்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை கிடப்பில் போட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மூதாட்டி எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 27 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்ட அதிமுக முன்னாள் யூனியன் சேர்மன் மீது நடவடிக்கை எடுத்து உயிருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். 

சேலம்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட முக்கிய மனுக்கள்

இதேபோன்று சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன், பிரியா தம்பதியர்களுக்கு மிதுன், நவீன் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பிரியா உயிரிழந்த நிலையில் ஜெகநாதன் பட்டு சரிகை தொழில் செய்துள்ளார்.இந்த நிலையில் தாரமங்கலம் மல்லிகுட்டை பகுதியை சேர்ந்த கோபால் என்பவருடன் ஜெகன்நாதன் இருவரும் இணைந்து தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால், ஜெகநாதன் தனியாக தொழிலை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு இரண்டரை லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி, கோபால் என்பவர் அடிக்கடி ஜெகநாதனை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தந்தை பயந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மகன்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சேலம்: மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட முக்கிய மனுக்கள்

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகநாதன் நேற்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போன தந்தையை மீட்டு தரக்கோரி மகன்கள் இருவரும் பள்ளி சீருடையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர். ஏற்கனவே தங்களுடைய வீட்டில் வந்து அடியார்களுடன் மிரட்டி செல்லும் சிசிடிவி காட்சிகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தையை கண்டுபிடித்து தருமாறு புகார் ஒன்றை எடுத்து வந்திருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget