மேலும் அறிய

8ஆம் வகுப்பு...! 9 புத்தகங்கள்...! 36 விருதுகள் - முனைவர் பட்டம் பெற்று அசத்தும் சேலம் அரசுப்பள்ளி மாணவன்

’’தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கு கவிதை, பாரதியாரின் ஆத்திச்சூடி, ஔவையார் ஆத்திச்சூடி, காலத்தை வென்ற கலாம் ஆகிய தொகுப்பு கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார்’’

சேலத்தில் அரசுப்பள்ளி மாணவன் கவிதை மீது கொண்ட காதலால் 9 புத்தகங்களை எழுதி வெளியிட்ட நிலையில் 36 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டியில் வசிக்கும் செல்வகுமார்-விஜயலட்சுமி, தம்பதியின் மகன் மதுரம் ராஜ்குமார். மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் இவர், இந்த சிறுவன் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் போது தந்தையிடம் கவிதை எழுதித் தரும்படி கேட்டுள்ளார். அப்போது நீயாக முயற்சித்துப் பார் என்று கூறியவுடனே, கவிதை என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தந்தையிடம் கேட்டறிந்தார்.

8ஆம் வகுப்பு...! 9 புத்தகங்கள்...! 36 விருதுகள் - முனைவர் பட்டம் பெற்று அசத்தும் சேலம் அரசுப்பள்ளி மாணவன்

அப்பொழுது சிறுவனுக்கு கவிதை மீதான ஆர்வம் தீயாகப் பற்றிக் கொண்டது. முதலில் தந்தை, தாய் பற்றிய கவிதை எழுதி இரண்டாம் பரிசு வென்றபோது ஏற்பட்ட ஊக்கத்தினால் கவிதையின் மீது தீராத காதல் கொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார். தற்பொழுது 12 வயதாகும் மாணவன் மதுரம் ராஜ்குமார் 9 புத்தகங்களை எழுதி சாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் சார்பாக முனைவர் பட்டம், இளம் கம்பர், இளம்பாரதி மற்றும் பல்வேறு துறைசார்ந்த விருதுகள் என 36 விருதுகளை பெற்று, அனைத்து அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களாலும், அனைத்து சாதனைகளையும் புரிய முடியும் என்று மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

8ஆம் வகுப்பு...! 9 புத்தகங்கள்...! 36 விருதுகள் - முனைவர் பட்டம் பெற்று அசத்தும் சேலம் அரசுப்பள்ளி மாணவன்

குறிப்பாக தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கு கவிதை, பாரதியாரின் ஆத்திச்சூடி, ஔவையார் ஆத்திச்சூடி, காலத்தை வென்ற கலாம் ஆகிய தொகுப்பு கவிதை புத்தகங்கள் எழுதியுள்ளார். குறிப்பாக வாழ்க்கையில் நிகழும் தினசரி அன்றாட நிகழ்வுகளை கொண்டு சிறுகதைகளையும் கற்பனை கலந்து சிறுவன் எழுதி அசத்தியுள்ளார். நான் நன்றாகப் படித்து வருங்காலத்தில் மருத்துவம் படித்து முடித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் மருத்துவம் படித்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனால் தான் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக புரிந்து கொள்ளமுடியும் என்பதே என்னுடைய கண்ணோட்டம் என்றும் மாணவன் கூறுகிறார்.

8ஆம் வகுப்பு...! 9 புத்தகங்கள்...! 36 விருதுகள் - முனைவர் பட்டம் பெற்று அசத்தும் சேலம் அரசுப்பள்ளி மாணவன்

மேலும், தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் முடிந்தவரை தமிழில் பேசுவதையும், எழுதுவது மற்றும் கையப்பம் இடுவது போன்றவற்றை செய்துவந்தால் தமிழ் தானாக வளரும் என்று மாணவன் கூறினார். இதனை அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அரசுப்பள்ளி மாணவன் மதுரம் ராஜ் குமாரை அழைத்து பாராட்டு தெரிவித்தார். மதுரம் ராஜ்குமாரின் தந்தை செல்வகுமார் கூறுகையில், அனைத்து குழந்தைகளுக்கும் தனித்திறமை என்று ஒன்று இருக்கும் அதனை வெளிக்கொண்டு வருவது பெற்றோர்களின் மிகப்பெரிய கடமை இன்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget