மேலும் அறிய

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

’’ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை’’

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மூன்றோடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார்.

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச மின்சாரம் உடனே வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மின் மிகை மாநிலம் என்று கூறிக்கொண்ட கடந்த அதிமுக ஆட்சியில் இதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளை முறையாக கணக்கெடுத்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சேலத்தில் திருமணிமுத்தாறு திட்டத்தை பற்றி 50 ஆண்டுகளாக பேசிக்கொண்டு உள்ளோம், தற்போது தான் ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியை துவக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடையும் வகையில் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

மேட்டூரில் நிறைய தண்ணீர் இருந்தாலும் மேட்டூர் அருகே உள்ள கெளத்தூரில் குடிப்பதற்கு மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை இருந்து சேலம் வரை உள்ள சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும், ஆத்தூர் தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வைத்த அனைத்து கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தான் ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த கோரிக்கை முதலமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதலமைச்சரை நேரில் விவசாயிகள் நேரில் சந்திக்க உள்ளனர் இதனால் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும். திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதாகவும் அதை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தற்போது சேலம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் 2 ஆண்டுகளில் முடிவுற்று விடும் அதன் பின்னர் கழிவுநீர் திருமணிமுத்தாறு கலப்பது பெரும்பாலும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
Minister Keerthana: பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
Embed widget