மேலும் அறிய

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

’’ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை’’

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மூன்றோடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாப் பேருரையாற்றினார்.

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், தமிழகத்தில் இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச மின்சாரம் உடனே வழங்கபடும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக மின் மிகை மாநிலம் என்று கூறிக்கொண்ட கடந்த அதிமுக ஆட்சியில் இதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோருக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காத விவசாயிகளை முறையாக கணக்கெடுத்து பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சேலத்தில் திருமணிமுத்தாறு திட்டத்தை பற்றி 50 ஆண்டுகளாக பேசிக்கொண்டு உள்ளோம், தற்போது தான் ஆய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணியை துவக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடையும் வகையில் திட்டத்தை நிறைவேற்றி தரவேண்டும் மற்றும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை வசிஷ்ட நதியில் இணைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

மேட்டூரில் நிறைய தண்ணீர் இருந்தாலும் மேட்டூர் அருகே உள்ள கெளத்தூரில் குடிப்பதற்கு மக்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். உளுந்தூர்பேட்டை இருந்து சேலம் வரை உள்ள சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும், ஆத்தூர் தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்

இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வைத்த அனைத்து கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தான் ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்த கோரிக்கை முதலமைச்சரிடம் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதலமைச்சரை நேரில் விவசாயிகள் நேரில் சந்திக்க உள்ளனர் இதனால் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நல்ல முடிவு எட்டப்படும். திருமணிமுத்தாற்றில் கழிவுநீர் கலப்பதாகவும் அதை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். தற்போது சேலம் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் 2 ஆண்டுகளில் முடிவுற்று விடும் அதன் பின்னர் கழிவுநீர் திருமணிமுத்தாறு கலப்பது பெரும்பாலும் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால்தடம் பதிக்கும் லட்சிய ஜனநாயக கட்சி... ஜோஸ் மார்ட்டின் மாபெரும் பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் கால்தடம் பதிக்கும் லட்சிய ஜனநாயக கட்சி... ஜோஸ் மார்ட்டின் மாபெரும் பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
“ஃப்ரீ ஃபயர் விளையாட செல்போன் வேணும்” - சேலத்தில் நடந்த கொடூர கொலை... பின்னணி என்ன?
தவெகவுக்குப் போட்டியாக புதிய கட்சி உதயம்: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் களம் - யாரெல்லாம் சேரலாம்?
தவெகவுக்குப் போட்டியாக புதிய கட்சி உதயம்: தமிழக அரசியலில் சூடுபிடிக்கும் களம் - யாரெல்லாம் சேரலாம்?
ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும் மக்கள்!
ஆவின் நெய் எங்கே? வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு கர்நாடக அரசின் நெய் வாங்கும் மக்கள்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Enquiry: 246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
246 கேள்விகள்.! துளைத்தெடுத்த போலீஸ்.! விசாரணையில் நடந்தது என்ன.? அன்பில் மகேஷ் பரபரப்பு பேட்டி
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
தாய்மார்களுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் ரெடி.! எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு தேதி குறித்த CM விஜய்
Morning Breakfast Scheme: காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
காலை உணவுத் திட்டத்தில் புதிய மாற்றம்; குட்டீஸ்களுக்காக களத்தில் இறங்கிய CM விஜய்; அரசு முக்கிய அறிவிப்பு
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Trump Vs Iran: ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலா.? “நான் உள்ளே சென்று..“ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியது என்ன.?
TVS Orbiter on EMI: குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
குறைஞ்ச முன்பணம், ஈசியான EMI திட்டம்.! டிவிஎஸ் ஆர்பிட்டர் EV ஸ்கூட்டர சொந்தமாக்குங்க; முழு விவரம்
Maruti Dzire CNG AMT: இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
இனி செலவு மட்டும் இல்ல, கால் வலியும் குறைஞ்சுடும்.! மாருதி டிசையர் CNG மாடலில் இப்போது AMT வசதி
Karuppu Muruganandam : ’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
’கர்ப்பம் ஆக்கினார், கலைத்தார், கொடுமைப்படுத்தினார்’ கருப்பு முருகானந்தம் மீது பெண் பரபரப்பு புகார்..!
Embed widget