மேலும் அறிய

சேலம்: பொது மக்களின் மனுக்களை வாங்கிய ஆட்சியர்-தீக்குளிப்பு முயற்சிகள் இல்லாமல் முடிந்த குறைதீர் கூட்டம்

’’மாவட்ட ஆட்சியரே நேரடியாக மக்களை சந்தித்து மனுக்களை வாங்கியதால் தீக்குளிப்பு உள்ளிட்ட எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் குறைதீர் கூட்டம் நடந்து முடிந்தது’’

கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசு உத்தரவுப்படி மீண்டும்  தொடங்கியது. சேலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொது மக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் மனுக்களை பெற்று கொண்டார்.

சேலம்: பொது மக்களின் மனுக்களை வாங்கிய ஆட்சியர்-தீக்குளிப்பு முயற்சிகள் இல்லாமல் முடிந்த குறைதீர் கூட்டம்

பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை புகார் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவித்து அதன் மூலம் உடனடி தீர்வு காண ஏதுவாக வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டங்களில் மூலம் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நேரடியாக மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால்  கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக மனுக்கள் பெறுவது தவிர்க்கப்பட்டு புகார் பெட்டி வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன. இதனால் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொதுமக்களுக்கும் நேரடி தொடர்பு இல்லாமல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலான புகார்களுக்கு தீர்வு காணப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக இருந்தது. இந்தநிலையில் நோய்த்தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருவதால் மீண்டும் நேரடி குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த தமிழக அரசு சார்பில் கடந்த 28 ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. 

சேலம்: பொது மக்களின் மனுக்களை வாங்கிய ஆட்சியர்-தீக்குளிப்பு முயற்சிகள் இல்லாமல் முடிந்த குறைதீர் கூட்டம்

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் தொடங்கப்பட்டன. சேலத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் மனுக்களை நேரடியாக பெற்றுக்கொண்டு அதை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னதாக ஏற்கனவே புகார் பெட்டி வாயிலாக பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன நடவடிக்கை எடுக்கப்படாத எத்தனை அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அனைத்து துறை அலுவலர்களிடம் நேரடி ஆய்வு மேற்கொண்டார். நேரடி குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டது எடுத்து மனுதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம்: பொது மக்களின் மனுக்களை வாங்கிய ஆட்சியர்-தீக்குளிப்பு முயற்சிகள் இல்லாமல் முடிந்த குறைதீர் கூட்டம்

கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மனுக்களை ஆட்சியரிடம் அளிக்க வரும்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் போடும் நிலை இருந்ததால், பலர் தற்கொலை முயற்சியும், போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாததால் பலர் தீக்குளிக்க முயன்றனர் எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிய தீயணைப்பு வாகனம் வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நிறுத்திவைக்க பட்டிருந்த நிலையில் இன்று நேரடியாக ஆட்சியரிடம் மனு அளித்ததால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

தலைப்பு செய்திகள்

எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget