மேலும் அறிய

அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளார் - பொன்.ராதாகிருஷ்ணன்

அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் மிக உற்சாகமாக மிக வேகமாக உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் திமுக, கூட்டணி கட்சிகள் இன்றி தனியே நிற்கவில்லை என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலு நிறைந்ததாக எந்த கட்சியும் இல்லை என்றும் கூறினார்.

அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளார் -  பொன்.ராதாகிருஷ்ணன்

விசிக மது ஒழிப்பு மாநாடு:

மது ஒழிப்பிற்காக யார் மாநாடு நடத்தினாலும் அது பாராட்டுக்குரியது. இதில் அரசியல் ஆதாயம் தேட யாரும் முயற்சிக்கக் கூடாது என்று கூறிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பொதுவான பிரச்சனைக்காக மாநாடு நடத்த திட்டமிட்டு விட்டு பாரதிய ஜனதா கட்சியை மட்டும் அழைக்க மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுவது அவரது பார்வையில் கோளாறு இருப்பதை காட்டுவதாக விமர்சித்தார்.

நடிகர் விஜய் அரசியல் வருகை நல்வரவாக அமையட்டும் என்று வாழ்த்து தெரிவித்த பொன் ராதாகிருஷ்ணன் அரசியலில் பகையாளி என்று யாரும் இல்லை. தமிழக நலனுக்காகவும் தமிழர் நன்மைக்காகவும் அனைவரும் சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.

அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளார் -  பொன்.ராதாகிருஷ்ணன்

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் அங்கு பல்வேறு நிறுவனங்களை அழைத்து பேசும் செய்தி பெரிதாக மக்களைச் சென்றடையவில்லை. ஆனால் சென்னை அரசு பள்ளியில் நடந்த நிகழ்வு சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாக கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அரசு பள்ளிகளில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளார். தமிழ்நாட்டில் அரியலூரில் நடைபெற்ற ரயில் விபத்தின் போது அப்போது மத்திய ரயில்வே அமைச்சர் தானாக முன்வந்து பதவி விலகினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை இலாகாவையாவது குறைந்தபட்சம் முதலமைச்சர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பள்ளிப் பாடங்களில் அரசியல் தலைவரின் பாடங்களை வைப்பதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு, ஔவையாரின் நல்ல பாடல்களையும் நாலடியார் உள்ளிட்ட பாடங்களையும் நீக்கி உள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். 

இனிப்பு மற்றும் கார வகைகள் ஒரே ஜிஎஸ்டி வழங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு, இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சர் கருத்து கேட்கப்படும் என கூறியுள்ளார். அனைவரின் கருத்தும் பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்று கூறினார்.

பேட்டியின் போது சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுரேஷ் பாபு, கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Savukku Shankar : சவுக்கு சங்கர் குண்டாஸ் ரத்து! உடனே விடுதலை பண்ணுங்க.. ஆனாThanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
Breaking News LIVE, Sep 25: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
இலங்கை அதிபருக்கு நெகிழ்ச்சியுடன் தமிழில் வாழ்த்து சொன்ன பிரான்ஸ் அதிபர் மேக்ரான்!
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget