மேலும் அறிய

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்

காரிமங்கலம் அருகே ஏரிகளில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி, ஏரிகளை சுற்றிலும் 2,100 பலமரங்களை நட்டு வைத்து, மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முக்குளம் கிராம ஊராட்சியில் முக்குளம், சீகலஹள்ளி, மொரசப்பட்டி, மூக்கனூர், உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த முக்குளம் ஊராட்சியில் மொரசப்பட்டி ஏரி, முக்குளம் ஏரி, சீகலஹள்ளி ஏரி, சோமலிங்க ஐயர் ஏரி உள்ளிட்ட 5 ஏரிகள் உள்ளன.  ஆனால் இந்த ஏரிகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்ததும், கரையோரங்களில் முட்புதர்களுமாக இருந்து வந்தது. இதனால் மழைக் காலங்களில் வரும் குறைந்த அளவு தண்ணீரும், தேக்கி வைக்க முடியாமல், உடனடியாக வற்றிப் போய்விடும். இதனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஊராட்சிக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காஞ்சனா கண்ணபெருமாள் ஊராட்சியில் உள்ள நீர்வளத்தை பெருக்க வேண்டும் என திட்டமிட்டார். இதனை அடுத்து பஞ்சாயத்துகளில் உள்ள ஐந்து ஏரிகளையும் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி உறுதியளிப்பு திட்டத்தின் மூலம் பணியாளர்களை வைத்து சீமை கருவேலம் மரங்களை முழுவதும் அகற்றி ஏறி கரையோரையில் இருந்த முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினார்.
 

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்
 
மேலும் ஏரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக ஏரிக்கரை முழுவதுமாக பலன் தரும் மரம் மற்றும் நிழல் தரும் மரங்களை, ஆந்திர மாநிலத்திற்கு சென்று 2100 மரக்கன்றுகளை வாங்கி வந்து நட்டு பராமரித்து வருகிறார். இந்த மரக்கன்றுகள் ஒன்றின் விலை 600 ரூபாய். இதில் மா, பலா, வாழை, நாவல், மூங்கில், காட்டு நெல்லி உள்ளிட்ட பலன் தரும் மரங்களை நட்டு வைத்துள்ளனர். இந்த மரங்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் பராமரிப்பு பணிகளை ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் உள்ள பெண்கள் தினமும் ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து ஊற்றுவதும், மருந்து தெளிப்பதுமாக தற்பொழுது பராமரித்து வருகின்றனர்.
 
இந்த மரங்கள் முழுவதும் ஓரிரு ஆண்டுகளில் பலன் தருகின்ற பொழுது இதில் கிடைக்கும் வருமானங்களை வைத்து கிராம ஊராட்சிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். தற்பொழுது பெய்த தொடர் மழையால் இந்த ஏரிகள் முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனால் ஏரியில் முழுவதும் சிறு சிறு செடி கொடிகள் கூட இல்லாமல் ஏரியைச் சுற்றிலும் பல்வேறு மரக்கன்றுகள் இருப்பதால் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது. இதனால் இந்த பகுதிக்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ஊராட்சி மன்ற தலைவரின் பணியையும் பாராட்டியுள்ளார்.

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்
 
மேலும் பஞ்சாயத்தில் மின் கட்டணத்தை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் 450-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் இருந்த அனைத்து மின்விளக்குகளையும் எல்இடி விளக்குகளாக மாற்றியுள்ளார். இதனால் எல்இடி  மின்விளக்குகளின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் மின்சாரமும் சிக்கனமாக பயன்படுத்தப்படும்.  மேலும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு மின்மோட்டர் மூலம் தண்ணீர் நிரப்புவதில், போதிய அளவு மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டால் முறையாக தண்ணீர் வழங்க முடிவதில்லை. இதனால் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மொபைல் செயலி மூலமாக, கிணற்றிலிருந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இந்த செயலி மூலம் தண்ணீரை நிரப்புவதும், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் நிரம்பியதும், அதனை நிறுத்துவதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் போதிய அளவு மின்சாரம் இருக்கிறதா? மகன்மோட்டரில் ஏதேனும் பழுது ஏற்படுகிறதா? என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் டேங்க் ஆபரேட்டர்கள் எங்கிருந்தாலும், இதனை இயக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு மணி நேரம் ஓடுகின்ற மின்மோட்டர்கள் மூன்று மணி நேரத்தில், 8 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகிறது. இதனால் கிராமத்தில் உள்ள மக்களுக்கு போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரமும் சிக்கனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளிலும் இந்த மொபைல் செயலியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

தருமபுரி : மொபைல் செயலி மூலம் மின் மோட்டர்களை இயக்கி மின்சாரத்தை சேமித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்
 
மேலும் கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஜனசக்தி மிஷின் திட்டத்தின் மூலம் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டு, நாள் முழுவதும் பொது மக்களுக்கு கட்டணம் இல்லாமல் குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்த அறை திறந்தே இருப்பதால், குடிநீர் தேவை உள்ள பெண்கள் குடங்களை எடுத்துச் சென்று எந்த நேரத்திலும் தேவையான அளவு தண்ணீரை பிடித்துக் கொள்கின்றனர். இதனால் முக்குளம் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துள்ள இந்த ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகள் கிராம மக்களை ஈர்த்துள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவரை போலவே மற்ற ஊராட்சிகளுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என கிராம மக்களே விரும்புகின்றனர். இவரைப் போன்ற ஊராட்சி மன்ற தலைவர் மற்ற ஊராட்சி மன்ற தலைவர்களின் செயல்பாடுகள் இருந்தால் அனைத்து கிராமங்களும் வளர்ச்சி பெறும்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget