மேலும் அறிய

தருமபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஓணம்...அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் அசத்தல்..!

தருமபுரியில் கேரள சமாஜம் சார்பில் நேற்று ஓணம் திருவிழா அத்தப்பூ கோலமிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையாக கருதப்படுவது ஒணம் திருவிழா. இந்த பண்டிகை கடந்த 8 தேதி  கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஓணம் திருவிழாவை ஒட்டி தருமபுரி கேரள சமாஜம் சார்பில் இருபதாவது ஆண்டு ஒணம் திருவிழா தருமபுரியில் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவை ஒட்டி மலையாள மொழி பேசும் பெண்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு மலர்களால் ஆன அத்தப்பூ கோலம் போட்டனர். இந்த வண்ண கோலம், பண்டிகைக்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இந்த திருவிழாவில் முக்கிய அம்சமாக,  மகாபலி சக்கரவர்த்தியாக வேடமிட்ட ஒருவர் வலம் வந்து அனைவருக்கும் நல்லாசி வழங்கினார். 
 

தருமபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஓணம்...அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் அசத்தல்..!
 
அதனையடுத்து சமாஜ பெண்கள் அணி சார்பாக கேரளாவின் பாரம்பரிய நடனமான கைகொட்டிகளி, குழந்தைகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட  அனைவருக்கும் 27 வகை பதார்த்தங்கள் அடங்கிய ஓணம் சத்யா வழங்கப்பட்டது. இவ்விழாவில் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் தொழிலதிபர் டிஎன்வி செல்வராஜ், சேலம் மண்டல அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்தியலிங்கம் ஆகியோர் சிறப்பழைப்பாளராக  கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கேரள சமாஜத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

 
தருமபுரி அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள  தட்ஷணகாசி காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி  ஏராளமான பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.
 

தருமபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஓணம்...அத்தப்பூ கோலமிட்டு பெண்கள் அசத்தல்..!
 
காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என தனிக்கோயில் தருமபுரி அடுத்த அதியமான்கோட்டையில் தட்ஷ்ண காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.  மேலும் காசிக்கு செல்ல முடியாதவர்கள் அதியமான்கோட்டையில் உள்ள பைரவர் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இதனால் தேய்ப்பிறை நாட்களில் இந்த கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மன்னன் அதியமான் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில் என்பதால் தமிழகம் மட்டும் அல்லாமல்  வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி நாட்களில் வந்து தங்களது நேர்த்தி கடன் நிறைவேற வேண்டும் என காலபைரவருக்கு வெள்ளை பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதே போல் பரிகார தலமான இக்கோயிலில் பைரவருக்கு தோஷங்கள் நீங்க வில்வமாலையும், திருமணம் தடை நீங்க  மஞ்சள் மாலையும், கோர்ட்டு வழக்குகளிலிருந்து விடுபெறவும் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேங்காய் மாலையும், மாணவர்கள் நன்கு படிக்க கொண்டை கடலையில் மலையும், குழந்தை பாக்கியம் கிட்ட முந்திரி மாலையும், அணிவித்தும் பில்லி,சூனியம் விலக மிளகாய் யாகங்களும் செய்யப்படும்,மேலும் கோயிலை 18 முறை வலம் வந்து பைரவரை வணங்கினால் சகல தோஷங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது.
 
அதன் அடிப்படையில்  இன்று தேய்பிரை அஷடமி என்பதால் காலை முதல் பைரவருக்கு பல்வேறு யாகங்களும், 64 வகையான அபிகங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பைரவர் ருத்ராட்சை பந்தலில் ராஜ அலங்காரத்தில்  அருள் பாலித்த பைரவருக்கு  இலட்சார்ச்சனைகள் நடைபெற்றது. இந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில் கலந்துகொள்ள தமிழகம் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்து  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோயிலை 18 முறை வலம் வந்து தீபம் ஏற்றி நீண்ட வரிசையில் நின்று  பைரவரின் அருளைப்பெற்று சென்றனர்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin's Plan: மனோ தங்கராஜ் ரீ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட கணக்கு.. தேறுமா வாக்கு.?
மனோ தங்கராஜ் ரீ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட கணக்கு.. தேறுமா வாக்கு.?
பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க! முதலில் இதை செய்யுங்க! – வானதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க! முதலில் இதை செய்யுங்க! – வானதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
Minister Duraimurugan: பெண்கள் பாதுகாப்பை கேள்வி கேட்ட வானதி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! கதிகலங்கிய பேரவை!
Minister Duraimurugan: பெண்கள் பாதுகாப்பை கேள்வி கேட்ட வானதி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! கதிகலங்கிய பேரவை!
Murugesan Kannagi Case: சாதி வெறியின் உச்சம்! முருகேசன் - கண்ணகியை எப்படி கொலை செய்தார்கள் தெரியுமா?
Murugesan Kannagi Case: சாதி வெறியின் உச்சம்! முருகேசன் - கண்ணகியை எப்படி கொலை செய்தார்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்Thirumavalavan: ”துணை முதல்வர் ஆஃபர் வந்தது” மேடையில் போட்டுடைத்த திருமா! கலக்கத்தில் திமுக!செந்தில் பாலாஜி ராஜினாமா? அ.மலையை வீழ்த்தியவருக்கு ஜாக்பாட்! உடனே OK சொன்ன ஸ்டாலின்TVK Vijay: ”உங்கள நம்புனேன் பாரு” விபூதி அடித்த பிரசாந்த் கிஷோர் இறங்க வந்த விஜய் | Vijay | EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin's Plan: மனோ தங்கராஜ் ரீ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட கணக்கு.. தேறுமா வாக்கு.?
மனோ தங்கராஜ் ரீ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட கணக்கு.. தேறுமா வாக்கு.?
பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க! முதலில் இதை செய்யுங்க! – வானதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க! முதலில் இதை செய்யுங்க! – வானதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
Minister Duraimurugan: பெண்கள் பாதுகாப்பை கேள்வி கேட்ட வானதி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! கதிகலங்கிய பேரவை!
Minister Duraimurugan: பெண்கள் பாதுகாப்பை கேள்வி கேட்ட வானதி! ராமாயணத்தை இழுத்த துரைமுருகன்! கதிகலங்கிய பேரவை!
Murugesan Kannagi Case: சாதி வெறியின் உச்சம்! முருகேசன் - கண்ணகியை எப்படி கொலை செய்தார்கள் தெரியுமா?
Murugesan Kannagi Case: சாதி வெறியின் உச்சம்! முருகேசன் - கண்ணகியை எப்படி கொலை செய்தார்கள் தெரியுமா?
North Korea in War: இந்தா.. இறங்கிடுச்சுல்ல வட கொரியா.. இனி எங்க போர் முடியறது.?!!
இந்தா.. இறங்கிடுச்சுல்ல வட கொரியா.. இனி எங்க போர் முடியறது.?!!
CM Stalin: கடுப்பில் அரசு ஊழியர்கள்,  ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?
CM Stalin: கடுப்பில் அரசு ஊழியர்கள், ஐஸ் வைத்த ஸ்டாலின்.. நினைத்தது நடக்குமா? சொன்னதெல்லாம் நியாபகம் இருக்கா?
Paresh Rawal: ”மூத்திரம் குடிக்கணுமா? வாட்ஸ்-அப் பூமர் அங்கிள்” பாஜக முன்னாள் எம்.பியை வெளுத்து வாங்கிய டாக்டர்
Paresh Rawal: ”மூத்திரம் குடிக்கணுமா? வாட்ஸ்-அப் பூமர் அங்கிள்” பாஜக முன்னாள் எம்.பியை வெளுத்து வாங்கிய டாக்டர்
CM Stalin: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு பலன்.. முதல்வரின் 9 அறிவிப்புகள்...
Embed widget