மேலும் அறிய

Northeast Monsoon: பொதுமக்கள் இல்லாமல் பெயரளவிற்கு நடந்த பேரிடர் ஒத்திகை

தீயணைப்பு வீரர்களின் இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்ற ஆட்கள் யாரும் இல்லாமலே பெயரளவிற்கு நடைபெற்றது.

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் இல்லாமல் பெயரளவிற்கு நடைபெற்ற  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்து தீயணைப்பு துறையினர் மாதிரி ஒத்திகை நடத்தினர்.
 
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகள் குறித்தும், பாதிப்புகளிலிருந்து, தங்களை  பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவ மழை பேரிடர் கால முன்னெச்சரிக்கை, தீ பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை மாதிரி குறித்து ஒத்திகை நிஙழ்ச்சி நடைபெற்றது. இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. அப்பொழுது பருவமழை காலங்களில் பொதுமக்களை காப்பாற்றவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் பொழுது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன இயந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு. வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களின் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Northeast Monsoon: பொதுமக்கள் இல்லாமல் பெயரளவிற்கு  நடந்த பேரிடர் ஒத்திகை

 
தொடர்ந்து தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உயர் மாடி கட்டடங்களில் மாடிப்படி வழியாக வரமுடியாத சமயத்தில் கயிறு மற்றும் தார்பாலின் மூலமாக மீட்பது, கூட்ட நெரிசலில் விழுந்தால் தற்காத்துக்கொள்வது, ஆடைகள் தீப்பற்றி கொண்டால் தற்காத்து கொள்வது தலை மற்றும் கைகால் பகுதிகளில் ஏற்படும் காயங்களுக்கு எவ்வாறு கட்டு போடுவது என்ற செயல் வழி விளக்கம் செய்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கங்களை செய்து காட்டினர்.  ஆனால் தீயணைப்பு வீரர்களின் இந்த பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்ற ஆட்கள் யாரும் இல்லாமலே பெயரளவிற்கு நடைபெற்றது. இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்ற நிலையில் பொதுமக்களுக்காக நடத்தப்படுகின்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரிடர் மீட்பு துறையினர் பொதுமக்களை அழைக்காமல் பெயரளவிற்கு, குறைந்த அளவு அலுவலர்களை நிறுத்தி செயல் விளக்கங்களை முடித்தனர். வடகிழக்கு பருவமழையில் பாதிப்புகளில் இருக்கும் பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக நடத்தப்படுகின்ற அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களே யாரும் இல்லாமல் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இது போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற பொழுது பேரிடர் மீட்பு துறையினர் பொதுமக்களை அழைக்காமல், பெயரளவுக்கு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நடத்துவது எந்த பயனும் இல்லாமல் போகிறது. எனவே பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடக்கும்போது, பெருமளவில் பொதுமக்களை அழைத்து வைத்து ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வரட்டும்: அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
Trump Vs Biden: இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
இந்திய தேர்தலில் ஜோ பைடன் தலையிட்டாரா.? ட்ரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு...
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
மகா கும்பமேளாவுக்கு சென்ற டபுள் டக்கர் பேருந்து விபத்து! 6 பேர் பலி! 40 பேர் படுகாயம்
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை
Annamalai on 2026 Election: தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
தமிழ்நாட்டில் ரூ.2,500-க்கு மேல் மகளிர் உரிமைத் தொகை.. லீக்கான பாஜக தேர்தல் வாக்குறுதி..
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
Apple iPhone SE 4: இந்தியாவில் அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் SE 4: எவ்வளவு விலை, என்னென்ன அம்சங்கள்? – முழு விபரம்
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
அதிர்ச்சி வீடியோ! 270 கிலோ எடையை தூக்கும்போது மிஸ்! பவர் லிஃப்டிங் சாம்பியன் யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழப்பு
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.