Mettur Dam: மேட்டூர் அணை நீர்மட்டம்: அதிர்ச்சி தரும் மாற்றம்! நீர்வரத்து குறைவு, டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு!
சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 73,654 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 72,731 கன அடியாக சரிந்துள்ளது.

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 82 அடியாக இருந்த நிலையில் இன்று 84 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 73,654 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 72,731 கன அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர அணைக்கு நேற்று முன்தினம் மாலை 7,769 கனஅடியாகவும், நேற்று காலை 7,591 கனஅடியாகவும் இருந்த நீர்வரத்து நேற்று மாலை 12,614 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு விநாடிக்கு 18,000 கனஅடியிலிருந்து 16,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 118.70 அடியாகவும், நீர் இருப்பு 91.41 டிஎம்சியாகவும் இருந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 18,000 கனஅடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.காவிரி கரையோரங்களில் உள்ள அஞ்செட்டி, நாற்றம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, ராசி மணல், மொசல் மடுவு மற்றும் அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தொடா்ந்து இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 12,000 கனஅடியாகவும், பிற்பகல் விநாடிக்கு 16,000 கனஅடியாகவும், மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாகவும் அதிகரித்தது. நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.





















