மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 151 கன‌ அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வருவதால் டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 381 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 254 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 151 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 151 கன‌ அடியாக சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 113.54 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 83.54 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 5,300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 151 கன‌ அடியாக சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Free Visa: இந்தியர்களுக்கு கட்.. இலவச விசா கிடையாது, கடத்தல் & அபேஸ் - ஈரானின் முடிவிற்கு காரணம் என்ன?
Free Visa: இந்தியர்களுக்கு கட்.. இலவச விசா கிடையாது, கடத்தல் & அபேஸ் - ஈரானின் முடிவிற்கு காரணம் என்ன?
"அரசின் குழந்தைகள்.." தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள்: அரசு வேலைக்கு உத்தரவு - படிப்பைத் தொடர நடவடிக்கை - அசத்திய தமிழக அரசு
இன்னும் 5 நாட்கள் தான்... தமிழகத்தை நோக்கி வரப்போகிறது புயல்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
இன்னும் 5 நாட்கள் தான்... தமிழகத்தை நோக்கி வரப்போகிறது புயல்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
Tomato Price: ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்
ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு
மிரட்டி சாதித்த நிதிஷ்! பாஜக ப்ளான் FLOP! அடுத்த முதல்வர் யார்?
”பீகார் மாடல் கைகொடுக்குமா? பாமக, தவெக-க்கு அழைப்பு பாஜகவின் MASTERPLAN | ADMK | BJP | NDA Alliance

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Free Visa: இந்தியர்களுக்கு கட்.. இலவச விசா கிடையாது, கடத்தல் & அபேஸ் - ஈரானின் முடிவிற்கு காரணம் என்ன?
Free Visa: இந்தியர்களுக்கு கட்.. இலவச விசா கிடையாது, கடத்தல் & அபேஸ் - ஈரானின் முடிவிற்கு காரணம் என்ன?
"அரசின் குழந்தைகள்.." தாய், தந்தையை இழந்த 4 பிள்ளைகள்: அரசு வேலைக்கு உத்தரவு - படிப்பைத் தொடர நடவடிக்கை - அசத்திய தமிழக அரசு
இன்னும் 5 நாட்கள் தான்... தமிழகத்தை நோக்கி வரப்போகிறது புயல்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
இன்னும் 5 நாட்கள் தான்... தமிழகத்தை நோக்கி வரப்போகிறது புயல்.! தேதி குறித்த தமிழ்நாடு வெதர்மேன்
Tomato Price: ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்
ஒரே நாளில் பல்டி அடித்த தக்காளி விலை.! ஒரு கிலோ இவ்வளவா.? கதறும் இல்லத்தரசிகள்
Jerusalem Pilgrimage: புனித பயணம் செல்ல 60ஆயிரம் ரூபாய்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
புனித பயணம் செல்ல 60ஆயிரம் ரூபாய்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை சென்னையில் மிக கனமழை? தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: ஷேக் ஹசினா நாடு கடத்தப்படுவாரா? வ.தேசத்திற்கு ஆதரவளிக்குமா இந்தியா? நோ சொல்ல முடியுமா?
Sheikh Hasina: ஷேக் ஹசினா நாடு கடத்தப்படுவாரா? வ.தேசத்திற்கு ஆதரவளிக்குமா இந்தியா? நோ சொல்ல முடியுமா?
Saudi Bus Crash: 18 பேர்,  9 குழந்தைகள், 3 தலைமுறை.. குடும்பமே அழிந்த சோகம், கதறி அழும் உறவினர்கள்
Saudi Bus Crash: 18 பேர், 9 குழந்தைகள், 3 தலைமுறை.. குடும்பமே அழிந்த சோகம், கதறி அழும் உறவினர்கள்
Embed widget