மேலும் அறிய

டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போவதாக முத்தரசன் பேட்டி

வருகிற டிசம்பர் 29-ம் தேதி, ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போவதாக, தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டி.

தருமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநில செயலாளர் இரா.மைத்தரசன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முத்தரசன், “G 20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் இந்த G 20 மாநாடு கொடியில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாஜகவின் சின்னத்தை, G 20 மாநாட்டு கொடியில் பயன்படுத்தியது வேறு என்பது, ஏன் பிரதமர் மோடிக்கு தெரியாதா? 
 
தேர்தல் ஆணைய தலைவர் நியமனம் குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி சாதாரணமானது இல்லை. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில், அவருக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவசரம் என உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதற்கு பாஜக நேர்மையாக பதில் கொடுக்க வேண்டும். இதனை  நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும். தற்போது தேர்தல் ஆணையராக இருப்பவர்கள் பாஜகவின் கட்டளையை தீர்மானிப்பதாக தான் செயல்படுகிறார்கள். பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். மேலும் தேர்தல் தேதிகளை பாஜக தான் முடிவு செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. 
 
நம்முடைய  முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடுவை  பாராட்டி சென்னையில் விழா நடத்தப்பட்டது. அதில் வெங்கையா நாயுடு பேசும் போது, எந்த மொழியையும் திணிக்க கூடாது. இதனை நான் ஏற்கமாட்டேன்  என தெரிவித்துள்ளார். இதை வெங்கைய்யா நாயுடு பல முறை பேசியுள்ளார்.  ஆனால் காசி தமிழ்ச்சங்க விழாவில், அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவில், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு கொடுத்தள்ளனர். 
 
இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என தமிழை புகழ்ந்து பேசியுள்ளார். மோடியின் இந்த செயலை வரவேற்கிறேன். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக ஆட்சியில், சமஸ்கிருதத்ததிற்கு ரூ.222 கோடி ஒதுக்கி விட்டு, தமிழுக்கு 22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உள்ளம் ஒன்று, உதடு ஒன்று பேசுகிறது.
 

டிசம்பர் 29ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடப் போவதாக முத்தரசன் பேட்டி
 
தமிழக ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக நடத்துகிறார். இங்கு போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். அரசியல் சாசனத்தின்படி செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழக அரசு கொடுக்கின்ற மனுதாக்கல் கிடப்பில் உள்ளது. ஆனால் பிரதமர், குடியரசு தலைவர்கள் பாதுகாப்பு என்பது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தொடர்பானது. ஆனால் பிரதமர் வரும்போது தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கிறார். இதை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா-விடம் தான் கேட்க வேண்டும். ஆனால் ஆளுநரிடம், அண்ணாமலை கொடுக்கும் புகார் மீது உடனடியாக விளக்கம் கேட்டு, தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.  மேலும் ஆளுநர் ரவி, எல்லா நாடும் ஏதோ ஒரு மதத்தின் அடிப்படையில் இருக்கிறது. இந்தியா இந்து மதத்தை சார்ந்துள்ளது. புதிய கல்வி கொள்கை செயல்படுத்த வேண்டும் என ஆளுநர் ரவி பேசி வருகிறார். இதனால் ஆளுநர் ரவியின் செயல்பாடு ஏற்புடையதல்ல. இதனால் வருகிற டிசம்பர் 29-ம், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை, பல்லாயிரக் கணக்கானோரை திரட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது” என தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget