மேலும் அறிய

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக சேலத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

’’மத்திய அரசு குறியீடான HSN குறியீட்டில் வீட்டை அலங்கரிக்கும் ஆடம்பர துணிகளை போல குடிசை தொழிலான பட்டு நெசவு தொழிலுக்கு தனி குறியீடு வழங்க கோரிக்கை’’

சேலம் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், கொண்டலாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, சிந்தாமணியூர், ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜவுளி ரகங்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை வரும் ஜனவரி 2022 முதல் 12 சதவிகிதமாக உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கூறி மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்படும் கைத்தறி ஜவுளி ரகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக சேலத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பின்னர் பேசிய சேலம் மற்றும் திருச்செங்கோடு சரக கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மாவட்ட தலைவர் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் கைத் தறி நெசவுத்தொழில் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. மூலப் பொருட்கள் விலை உயர்வு. இவை அனைத்தையும் சமாளித்து கொண்டு கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருவதாகவும், தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பட்டு மீதான ஜி‌.எஸ்.டி வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக ஆக உயர்த்த உள்ளனர். கொரோனாவால் ஏற்பட்ட இழப்பிலிருந்து மில்லாத கைத் தறி நெசவுத் தொழில் தற்பொழுது ஜிஎஸ்டி வரியால் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும், இதனால் நெசவு தொழில் முழுவதுமாக கழிந்துவிடும் என்று கூறினார். மேலும், கைத் தறி நெசவுத் தொழில் மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக சேலத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநில அரசு உடனடியாக பட்டின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கைத்தறி நெசவு சார்ந்த பல லட்சம் குடும்பங்கள் உள்ளது. மேலும், மத்திய அரசு குறியீடான HSN குறியீட்டில் வீட்டை அலங்கரிக்கும் ஆடம்பர துணிகளை போல குடிசை தொழிலான பட்டு நெசவு தொழிலுக்கு தனி குறியீடு வழங்கப்பட வேண்டும் எனவும், கைத்தறி நெசவு மீதான ஜிஎஸ்டி வரியை பூஜ்ஜிய சதவீதமாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றதால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget