மேலும் அறிய

தருமபுரி: முத்தம்பட்டி மலைப்பாதையில் தடம் புரண்ட ரயில் - ரயில் பாதை மீண்டும் சீரமைப்பு

நேற்று இரவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, இன்று முதல் தருமபுரி, சேலம் மார்க்கமாக ரயில்களை இயக்கவும்,  மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க திட்டம்

கேரள மாநிலம் கண்ணணூரிலிருந்து பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூர்‌ நோக்கி பயணிகள் விரைவு ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை சேலம் ரயில் நிலையத்தை கடந்து பயணித்த ரயில் 3.50 மணியளவில் தருமபுரி மாவட்டம்  வே.முத்தம்பட்டி பகுதி  மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தொடர் மழை காரணமாக ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகளும் பெயர்ந்து ரயில்  என்ஜினின் சக்கரத்தில் சிக்கியதால் ரயில்  என்ஜின் லேசாக தடம் புரண்டது. மேலும் என்ஜினை ஒட்டியுள்ள 7 பெட்டிகளும் தடம் புரண்டன. அதே நேரம் ரயில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
 

தருமபுரி: முத்தம்பட்டி மலைப்பாதையில் தடம் புரண்ட ரயில் - ரயில் பாதை மீண்டும் சீரமைப்பு
 
அந்த தகவல் அறிந்த ரயில்வே துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தொடர் மழையிலும் ரயில் மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டநர். இது, ஒற்றை வழித்தட ரயில்பாதை என்பதால் அதிகாலை முதல் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரயிலின் பாதிக்கப்படாத ஏழு பெட்டிகள் வேறு இன்ஜின் மூலம் சேலம் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அதேபோல் முன்பக்கம் இருந்த மூன்று பெட்டிகள் தருமபுரி ரயில் நிலையத்திற்கும் அனுப்பப்பட்டது. இதில் இருந்த பயணிகள் பேருந்துகள் மூலமாக அனுப்பி வைத்தனர்.

தருமபுரி: முத்தம்பட்டி மலைப்பாதையில் தடம் புரண்ட ரயில் - ரயில் பாதை மீண்டும் சீரமைப்பு
 
இதனையடுத்து பெங்களூர், ஈரோடு, சேலம் பகுதிகளிலிருந்து சீரமைப்பு பணிக்காக 400-க்கும் றேற்பட்ட பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, தடம் புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்றது. இதில் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்களின் மூலம் ரயில் தண்டவாளத்தில் இருந்த பாறைகற்கள் அகற்றப்பட்டு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தின் மீது எடுத்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஒவ்வொரு பெட்டியாக இன்ஜின் மூலமாக இணைத்து, ஏழு பெட்டிகளும்  பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 15 மணி நேரத்திற்கு பிறகு ரயில் பாதை சீரமைக்கப்பட்டது. மேலும் ரயில் தண்டவாளத்திற்கு அடியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் கற்கள் உடைந்து இருந்ததால்,  இரண்டு கற்களுக்கு இடையில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், நேற்று இரவே சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, இன்று முதல் தருமபுரி, சேலம் மார்க்கமாக ரயில்களை இயக்கவும்,  மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 10 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே துறையினர் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த ரயில் தடம் புரண்டதால், மாற்று வழியில் பெங்களூரில் இருந்து சேலம் மார்க்கத்திற்கு ஜோலார்பேட்டை வழியில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget