மேலும் அறிய

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

ஆசிரியர்கள் திட்டியதால், வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியில் சென்ற தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கால தாமதமாக தெரிவித்துள்ளனர்.

தருமபுரி அடுத்த பழைய தருமபுரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடை உத்திரவு நீக்கப்பட்ட பிறகு தற்போது 100 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிட்டது.
 
ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
 
இதனை அடுத்து தற்பொழுது பள்ளிகள் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாலக்கோடு அடுத்த சித்திரைபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோகிலவாணி மற்றும் காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஹள்ளி  பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரின் மகள் மேகா என்ற இருவரும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
 

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் அந்த இரண்டு மாணவிகளும் பள்ளியின் சுற்றுச் சுவரை தாண்டி பள்ளியை விட்டு சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழுதபடியே பள்ளி வளாகத்தில் குவிந்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தருமபுரி முழுவதும் தேடினர். சுமார் 5 மணி நேர தேடலுக்கு பின் மாணவிகளை குண்டல்பட்டி என்ற இடத்தில் இருந்து காவல் துறையினர் மீட்டனர்.
 

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
 
தொடர்ந்து இரண்டு மாணவிகளையும் பெற்றோர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இந்த இரண்டு மாணவிகளையும், கட்டணம் செலுத்தவில்லை என ஆசிரியர்கள் திட்டியதால், வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியில் சென்ற தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கால தாமதமாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிள்ளைகள் குறித்து கேட்டால், உரிய பதிலளிக்கவில்லை பெற்றோர்கள் தெரிவித்தனர். தனியார் மெட்ரிக் பள்ளியில் 2 மாணவிகள் காணாமல் சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 

அரூாில் உள்ள திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் படம் ரத்து- படத்தை வெளியிட ரசிகர்கள் கோாிக்கை.
 
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள திரையரங்கில் சூர்யாவின் நடிப்பில் இன்ற வெளியாகும்  எதற்கும் துணிந்தவன் திரைப்படம் காலைக் காட்சிகள் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில் பாமகவினர் திரைப்படத்தை அரூரில் உள்ள திரையரங்குகளில் திரையிட கூடாது என இரு தினங்களுக்கு முன்பு அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். 
 

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
 
இதன் விளைவாக அரூரில் உள்ள திரையரங்கில் படம் வெளியானால், பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், திரையரங்கு நிர்வாகம், இன்று  காட்சிகள் ரத்து செய்தனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன், ஆர்வமாக இருந்த சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அரூர் திரையரங்கில் சூர்யா நடித்த படத்தினை வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரூர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget