மேலும் அறிய

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

ஆசிரியர்கள் திட்டியதால், வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியில் சென்ற தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கால தாமதமாக தெரிவித்துள்ளனர்.

தருமபுரி அடுத்த பழைய தருமபுரியில் தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடை உத்திரவு நீக்கப்பட்ட பிறகு தற்போது 100 சதவீத மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிட்டது.
 
ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
 
இதனை அடுத்து தற்பொழுது பள்ளிகள் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தனியார் மெட்ரிக் பள்ளியில் பாலக்கோடு அடுத்த சித்திரைபட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோகிலவாணி மற்றும் காரிமங்கலம் அருகே உள்ள பேகாரஹள்ளி  பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரின் மகள் மேகா என்ற இருவரும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
 

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் அந்த இரண்டு மாணவிகளும் பள்ளியின் சுற்றுச் சுவரை தாண்டி பள்ளியை விட்டு சென்றுள்ளனர். இந்த தகவலறிந்து வந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழுதபடியே பள்ளி வளாகத்தில் குவிந்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் தருமபுரி முழுவதும் தேடினர். சுமார் 5 மணி நேர தேடலுக்கு பின் மாணவிகளை குண்டல்பட்டி என்ற இடத்தில் இருந்து காவல் துறையினர் மீட்டனர்.
 

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
 
தொடர்ந்து இரண்டு மாணவிகளையும் பெற்றோர்களிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். இந்த இரண்டு மாணவிகளையும், கட்டணம் செலுத்தவில்லை என ஆசிரியர்கள் திட்டியதால், வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும் மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியில் சென்ற தகவலை, பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு கால தாமதமாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிள்ளைகள் குறித்து கேட்டால், உரிய பதிலளிக்கவில்லை பெற்றோர்கள் தெரிவித்தனர். தனியார் மெட்ரிக் பள்ளியில் 2 மாணவிகள் காணாமல் சம்பவம் தருமபுரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
 

அரூாில் உள்ள திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் படம் ரத்து- படத்தை வெளியிட ரசிகர்கள் கோாிக்கை.
 
தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள திரையரங்கில் சூர்யாவின் நடிப்பில் இன்ற வெளியாகும்  எதற்கும் துணிந்தவன் திரைப்படம் காலைக் காட்சிகள் வெளியிடப்பட இருந்தது. இந்நிலையில் பாமகவினர் திரைப்படத்தை அரூரில் உள்ள திரையரங்குகளில் திரையிட கூடாது என இரு தினங்களுக்கு முன்பு அரூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தனர். 
 

ஆசிரியர் திட்டியதால் பள்ளியில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
 
இதன் விளைவாக அரூரில் உள்ள திரையரங்கில் படம் வெளியானால், பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், திரையரங்கு நிர்வாகம், இன்று  காட்சிகள் ரத்து செய்தனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன், ஆர்வமாக இருந்த சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அரூர் திரையரங்கில் சூர்யா நடித்த படத்தினை வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரூர் சூர்யா ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget