மேலும் அறிய

தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி....போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள்..!

தருமபுரி அருகே அரசு மகளிர் உயர் நிலை பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம். 

தருமபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 385க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் உள்ளதாலும், அங்குள்ள கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. அதே போல் மழை காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி  காணப்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 
 

தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி....போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள்..!
 
மேலும், பள்ளியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வந்து செல்வதால், மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை சரி செய்ய வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகைய சீர்கேடுகளை சரி செய்யாமல் பணிகளை செய்தது போல் போலியாக பில் தயார் செய்து பணத்தை கையாடல் செய்து வருவதாகவும், அதனை தட்டி கேட்ட மாணவிகளின் பெற்றோர்களை தரக் குறைவாக பேசிய தலைமை ஆசிரியை கவிதா என்பரை இடமாற்றம் செய்யக் கோரி பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து முற்றுகையிட்டு தர்ணா போராடட்த்தில் ஈடுபட்டனர். இந்த தகவலறிந்து பள்ளிக்கு வந்த காவல் துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பிறகு பெற்றோர்கள்  மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க சென்றனர்.
 

தருமபுரி: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி....போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோர்கள்..!
 
 
  
மேலும் இந்த பள்ளியில் சுமார் 5 வருடங்களாக பணியாற்றி வரும் தலைமை ஆசிரியை கவிதாவிற்கும், இதே பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் இதர ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியை மாறிமாறி மருத்துவ விடுப்பு எடுத்து வருவதாலும், மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கிறது. மேலும் பள்ளி பராமரிப்பு செலிவினங்கள் என கூறி தலைமை ஆசிரியை தன்னிச்சையாக பல லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துள்ளதாகவும், அதுகுறித்து  பெற்றோர்கள் கேட்ட போது பெற்றோர்களை அவமரியாதை செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். தொடர்ந்து இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். தருமபுரியில் அரசு பள்ளியில் மாணவிகளின் பெற்றோர்கள் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget