மேலும் அறிய

தருமபுரி: கனமழையால் 3 நாளில் முழு கொள்ளவை எட்டிய பஞ்சப்பள்ளி சின்னார் அணை

தொடர் கனமழையால் மூன்றே நாளில் முழு கொள்ளவை எட்டிய பஞ்சப்பள்ளி சின்னார் அணை. வினாடிக்கு 400 கன அடி உபரி நீராக சின்னாற்றில் திறப்பு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னார் அணை உள்ளது. கடந்த சில மாதங்களாக அணையில் தண்ணீரில்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சின்னாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான தளி, தேன்கணிக்கோட்டை, அஞ்செட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி பெட்ட முகிலாலம், ஐயூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதில் கடந்த செவ்வாய்கிழமை ஒரே நாள் பெய்த மழையில், சின்னாற் அணையின் நீர்மட்டம் 15  அடி உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்து. இந்நிலையில் தொடர்ந்து இன்றைய காலை நிலவரப்படி அணையின் கொள்ளளவு 50 அடியில் 48 அடி வரை, தண்ணீர் நிரம்பியது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது. இதனால்  அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் வெளியேறும் இரண்டு கதவுகளிில் வழியாக சின்னாற்றில், வினாடிக்கு 400 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டள்ளது. மேலும் நீர்வரத்து தொடர்ந்து வருவதால், சின்னாறு பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் திறப்பால் பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
பென்னாகரம் அருகே ஆறு மாதத்தில் இரண்டு முறை நிரம்பிய கெட்டூர் ஏரி- சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் மீன் பிடிக்கும் கிராம மக்கள். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கெட்டூர் ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் ஜனவரி மாதம் கெட்டூர் ஏரி நிரம்பியது.  கடந்த சில மாதங்களில் தண்ணீர் வற்றிப் போய் வந்தது.
 
 இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தருமபுரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் கன மழை பெய்து வந்தது. இதில் பென்னாகரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் கெட்டூர் ஏரி கடந்த ஆறு மாதத்தில் தற்பொழுது இந்த தொடர் மழைக்கு இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. ஏரி நிரம்பி உபரி நீர் அருகில் உள்ள ஏரிக்கு வயல்வெளிகள் வழியாக வெளியேறி வருகிறது. மேலும் கெட்டூர் ஏரிக்கு வரும் தண்ணீர் சாலையை கடந்து வருவதால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஏரி நிரம்பியதால் பென்னாகரம் சாலையில் தண்ணீர் நிரம்பி தேக்கமடைந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தண்ணீரிலேயே மிதந்து செல்கின்றன. மேலும் புதிய நீர் என்பதால் ஏரியில் உள்ள மீன்கள் எதிர்நோக்கி செல்வதால், சாலையிலேயே மீன்கள் துள்ளி குதிக்கின்றன. இதனை கண்ட பொதுமக்கள் சாலையில் வரும் மீன்களை பிடித்து மகிழ்கின்றனர். மேலும் ஏரி நிரம்பி, வறண்டு ஆறு மாதத்திற்குள்ளாக மீண்டும் ஏரி நிரம்பியதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget