மேலும் அறிய

ஒகேனக்கல்லில் 25 நாட்களாக பரிசல் பயணம் நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - காரணம் என்ன..?

பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாததால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம், வருவாய் இல்லாமல் பரிசல் ஓட்டிகள் தவிப்பு.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் பயணத்திற்கான பாதுகாப்பு உடைகள்  முழுவதும் எரிந்ததால், கடந்த 25 நாட்களாக பரிசல் பயணம் நிறுத்தப்பட்டுள்ளது. பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாததால் ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், வருவாய் இல்லாமல் பரிசல் ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
 
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் வந்து ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிப்பது, பரிசல் பயணம் சென்று அருவியின் அழகை கண்டு ரசிப்பது, மீன் உணவு சமைத்து உண்டு மகிழ்ந்து செல்வது வழக்கம். இந்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை நம்பி ஆயில் மசாஜ், பரிசல் ஓட்டிகள், சமையல், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் என 2,500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 
 

ஒகேனக்கல்லில் 25 நாட்களாக பரிசல் பயணம் நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - காரணம் என்ன..?
 
 
ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பரிசலில் செல்ல நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பரிசலில் பயணம் சென்று அருவிகளை கண்டு ரசிக்க விரும்புவார் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி பாதுகாப்பு உடைப்பு ஏற்று நான்கு பேர் மட்டுமே பரிசலில் பயணம் செய்ய மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று அருவியின் அழகை கண்டு ரசிப்பது, சாரலில் நனைவது போன்ற பரிசல் பயணத்தை மட்டுமே அதிகமாக விரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசல் துறையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடைகளில் இரவில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் பரிசல் பயணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 2000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகள் முழுவதும் எரிந்து நாசமானது.
 


ஒகேனக்கல்லில் 25 நாட்களாக பரிசல் பயணம் நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - காரணம் என்ன..?
 
 
இதனால் பாதுகாப்பு உடைகள் முழுவதும் எரிந்ததால், பரிசல் பயணம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பு உடைகளை இருக்கிறது. ஆனால் இந்த பாதுகாப்பு உடைகள் 500 பரிசல்களுக்கு தேவையான அளவு இல்லை என்பதால் பரிசல் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 25 நாட்களாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செல்ல முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் பரிசல் சவாரியை நம்பி உள்ள பரிசல் ஓட்டிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
 

ஒகேனக்கல்லில் 25 நாட்களாக பரிசல் பயணம் நிறுத்தம்; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - காரணம் என்ன..?
 
தொடர்ந்து வருவாய் இல்லாமல் தவித்து வரும் பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் விரைந்து பாதுகாப்பு உடைகளை வாங்கித் தருமாறு முறையிட்டுள்ளனர். ஆனால் வாங்கி தருகிறோம் என்று, இன்று, நாளை என காலம் தாழ்த்தி தற்பொழுது 26 நாட்களை கடந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் பயணத்தை முழுமையாக முடிக்க முடியாமல், பரிசல் பயணம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அதேபோல் 25 நாட்களாக போதிய வருவாய் இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் பரிசலோட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசலோட்டிகளின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக போதிய பாதுகாப்பு உடைகளை வழங்கி பரிசல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் பரிசல் ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, பரிசல் பயணத்திற்கு தேவையான பாதுகாப்பு உடைகள் முழு முழுவதும் எரிந்து விட்டது. எனவே புதியதாக பாதுகாப்பு உடைகளை வாங்கி பரிசல் பயணத்தை தொடங்க, பரிசல் சவாரி  ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பாதுகாப்பு உடைகள் கிடைத்துவிடும்.  அதன் பிறகு பரிசல் இயக்க தொடங்கிய விடும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget