மேலும் அறிய

தருமபுரி: தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது

’’சபரிமுத்து என்ற இளைஞர், தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த், திருப்பதி இருவரையும் அழைத்துச் சென்று, சிறுமி வீட்டின் முன் காவலுக்கு நிறுத்தி விட்டு, அவர் மட்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்’’

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது தந்தையும் சகோதரனும், வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளனர். இதனை அறிந்த அதே பகுதியைச் சார்ந்த சபரிமுத்து என்ற இளைஞர், தனது நண்பர்கள் ஸ்ரீகாந்த், திருப்பதி இருவரையும் அழைத்துச் சென்று, சிறுமி வீட்டின் முன் காவலுக்கு நிறுத்தி விட்டு, அவர் மட்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் தனியாக வீட்டில் இருந்த சிறுமி திடீரென சபரிமுத்து உள்ளே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பொழுது சபரி முத்து திடீரென சிறுமியை பிடித்துக் கீழே தள்ளியுள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டு, வீட்டை விட்டு வெளியே போ என விரட்டி உள்ளார். ஆனால் சபரிமுத்து சிறுமியை கீழே தள்ளி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்பொழுது சிறுமி சத்தமிட்டு அலறியுள்ளார். 
 
அந்த நேரத்தில் சிறுமியின் தம்பி வீட்டுக்கு வந்ததால், வெளியில் நின்ற சபரிமுத்துவும், நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பெற்றோரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து சிறுமியின் பெற்றோர் கடத்தூர் காவல் நிலையத்தில், சபரி முத்து மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த கடத்தூர் காவல் துறையினர் சபரிமுத்து, ஸ்ரீகாந்த், திருப்பதி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சபரி முத்துவும் அதற்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் ஸ்ரீகாந்த் திருப்பதி ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ், கடத்தூர் காவல் துறையினர் கைது செய்து செய்தனர்.
 

 
தமிழ்நாட்டுக்கு வரும் காவிரிநீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியில் இருந்து 30,000 கன அடியாக குறைந்தது
 
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடிக்கு குறைவாகவே இருந்து வருகிறது. ஆனால் வட கிழக்கு பருவமழையால் தமிழக, கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. 
 

தருமபுரி: தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வருவதால், நேற்று காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 60,000 கன அடியிருந்தது சரிந்து, வினாடிக்கு 40,000 கன அடியாக குறைந்தது. இன்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 30,000 கன அடியாக உள்ளது.  தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்லும் நடைப்பாதை, அருவிகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றங்கரை ஓரம் வருவாய் பேரிடர், ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4ஆவது நாளாக நீர்வரத்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
மேகதாது அணை: 'சட்டத்திற்கு புறம்பானது' - சௌமியா அன்புமணி சாடல்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மேகதாது அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்: எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget