மேலும் அறிய

தருமபுரி: அரவைப் பணியை தொடங்கி வைப்பதில் திமுக - அதிமுக இடையே தள்ளுமுள்ளு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்கும்பொழுது அரவைப் பணியை தொடங்கி வைப்பதில் திமுக அதிமுகவினரிடையே தள்ளுமுள்ளு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபாண்டிற்கு இரண்டு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரவை பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதில் அரவை பணியை தமிழக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பதாக அழைப்பிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மற்றும் திமுக மேறகு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான திமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்நிலையில் பணி நிமித்தமாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. மேலும் தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தியும் வேறு பணியில் இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 
 

தருமபுரி: அரவைப் பணியை தொடங்கி வைப்பதில் திமுக - அதிமுக இடையே தள்ளுமுள்ளு
 
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வராததால் அரவப் பணியை தொடங்கப்பட்டது. அப்பொழுது கரும்பு அரவைப் பணியை யார் துவக்கி வைப்பது என்பதில், திமுக-அதிமுக தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது திமுகவைச் சார்ந்த பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இருவரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்பொழுது ஒரு புறம் திமுக-அதிமுக தொண்டர்களிடையே கை கலப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, பாதுகாப்பாக சர்க்கரை ஆலையை விட்டு வெளியே அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை தொடங்கி வைக்கும்போது, மாவட்ட ஆட்சித் தலைவர் வராததால், திமுக-அதிமுக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

 
காரிமங்கலம் வாரச் சந்தையில், தேங்காய் வரத்து அதிகரிப்பு-1 இலட்சம் தேங்காய் ரூ.15 இலட்சத்திற்கு விற்பனை.
 

தருமபுரி: அரவைப் பணியை தொடங்கி வைப்பதில் திமுக - அதிமுக இடையே தள்ளுமுள்ளு
 
தருமபுரி  மாவட்டம், காரிமங்கலத்தில் சந்தைக்கு, தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்களை, தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரம், முதல் ரக தேங்காய், 15 முதல், 25 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 6 முதல், 13 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் இன்றைய வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து, கடந்த வாரதை விட அதிகரித்தது. இன்றைய காரிமங்கலம் வாரச் சந்தைக்கு தேங்காய் வரத்து அதிகரித்து, 1 இலட்சம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்றைய சந்தையில், கடந்த வாரத்தை விட விலை அதிகரித்து, முதல் ரக தேங்காய், 15 முதல், 25 ரூபாய்க்கும், இரண்டாம் ரக தேங்காய், 6 முதல் 13 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த தேங்காய்களை மாலுார், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்றனர். இன்று 1 இலட்சம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் அனுமன் ஜெயந்தி வருவதால், தேங்காய் முழுவதும் ரூ.15 இலட்சத்திற்கு விற்பனையானது.  இதனால் கடந்த வாரம் தேங்காய் வரத்தும், விலையும் அதிகரித்து இருந்தது. மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், இனிவரும் நாட்களில் தேங்காய் வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
Iran Protest: மோசமாகும் நிலைமை.. இந்தியர்களை தாயகம் மீட்டு வர மத்திய அரசு திட்டம் - நடவடிக்கைகள் தீவிரம்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
Embed widget