மேலும் அறிய

Online Rummy:ஆன்லைன் ரம்மி: ரூ.20 லட்சம் இழந்த நபர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு

பணம் செலுத்தவில்லை என்றால் உன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உன்னை கேவலமாக சித்தரித்து வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான சதீஷ் குமார். இவர் திருச்சியில் உள்ள எம்.ஆர்.எப் டயர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 6 வயதான ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், சதீஷ் குமார் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடியதில் சுமார் ரூ. 20 லட்சம் மேல் பணம் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்றும் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. 

Online Rummy:ஆன்லைன் ரம்மி: ரூ.20 லட்சம் இழந்த நபர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு

தொடர்ந்து பணத்தை இழந்துவந்த இவர், ஒரு கட்டத்தில் ஆன்லைன் மூலம் கடன் கொடுக்கும், ஐந்து ஆன்லைன் கம்பெனிகளில் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெற்ற கடனை ரூ. 15 லட்சம் வரை அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ஆன்லைன் லோன் தரும் கம்பெனி நபர்கள், வாங்கிய லோன் பணத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் கட்டிய பிறகும், தினமும் சதீஷ் குமாரை போனில் அழைத்து பணம் கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பணம் செலுத்தவில்லை என்றால் உன்னிடம் தொடர்பில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் உன்னை கேவலமாக சித்தரித்து வெளியிடுவோம் என மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சதீஷ் குமார், மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு ஓமலூர் வந்துள்ளார். 

Online Rummy:ஆன்லைன் ரம்மி: ரூ.20 லட்சம் இழந்த நபர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு

பின்னர் ஓமலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். தொடர்ந்து கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக 60 தூக்க மாத்திரைகளை வாங்கி, அதை தனது மனைவி மற்றும் மகனுக்கு கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்வதற்கு மாத்திரையை விழுங்கியுள்ளார். இதனால், மூன்று பேரும் விடுதியில் அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர். இந்த நிலையில், வெளியே சென்றவர்களை காணவில்லை என்று உறவினர்கள் பல இடங்களிலும் தேடியுள்ளனர். இறுதியாக ஓமலூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தேடிய போது, மூன்று பேரும் ஒரு அறையில் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்களை மீட்டு ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீவட்டிபட்டு காவல்துறையினரும் மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் தற்கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thackeray Brothers Unite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thackeray Brothers Unite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Hamas Vs Israel: “நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
“நாங்களும் ஏத்துக்கறோம்“; பேச்சுவார்த்தைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஹமாஸ் - முடிவுக்கு வரும் காசா போர்?
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
அப்பாவ காப்பாத்தனும்...மன்றாடிய பிரபல நடிகர் மகள்...நடிகர் பிரபாஸ் செய்த உதவி
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை?  அதிர்ச்சியில் தொண்டர்கள்
TVK Prashant Kishor: தவெகவை கழற்றிவிட்ட பிரசாந்த் கிஷோர்! ஆதவ் அர்ஜூனாவின் உள்ளடி வேலை? அதிர்ச்சியில் தொண்டர்கள்
Ajith Kumar : Fast & Furious படத்தில் நடிப்பது பற்றி நடிகர் அஜித் குமார்...ரசிகர்களே சம்பவம் இருக்கு
Ajith Kumar : Fast & Furious படத்தில் நடிப்பது பற்றி நடிகர் அஜித் குமார்...ரசிகர்களே சம்பவம் இருக்கு
மருத்துவர்கள் எல்லாம் நடமாடும் தெய்வங்கள்.. உருக்கமாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
மருத்துவர்கள் எல்லாம் நடமாடும் தெய்வங்கள்.. உருக்கமாக பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
ரோலக்சையே மிஞ்சுமா தாஹா? பவர்ஃபுல் வில்லன் யார்? லோகேஷ் பவர் கொடுக்கப்போவது யாருக்கு?
Embed widget