மேலும் அறிய

தமிழ்நாட்டின் கடனை அடைக்க 2.69 லட்சத்திற்கு காசோலை எடுத்து வந்த நபரால் நாமக்கலில் பரபரப்பு

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.60 லட்சம் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பங்கான ரூ.2.60 லட்சத்தினை காசோலையாக வழங்க வந்த நபரால் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார்.  அந்த கடனை அடைக்க நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனருமான ரமேஷ் தியாகராஜன் தனது  குடும்பத்திற்கான பங்கினை 2,69,976 ரூபாய்க்கான தொகையை காசோலை வாயிலாக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து வழங்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.

வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை, ராஜேஷ் தியாகராஜன் சந்தித்த போது அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட கோட்டாட்சியர் கோட்டை குமார் அறிவுறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்தித்து தன் குடும்பத்தின் மேல் உள்ள கடன் தொகையை வழங்கிட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு ஆட்சியர் இல்லாததால் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் காசோலையை வழங்காமல் ரமேஷ் திரும்பி சென்றார். தமிழக நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி தனது கடன் பங்கான ரூ.2.69 லட்சத்தினை செலுத்த வந்த நபரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரமேஷ் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது,

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் கடனை  முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதற்காக தனது குடும்பத்திற்கான கடன் தொகையை காசோலையாக வழங்க உள்ளதாகவும், கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டின்  நகலையும் தனக்கு தரவேண்டும் என்றும் மேலும் இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு 15 லட்சம் குடும்ப கடனாக வழங்கி குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்கவும் தனி நபருடைய வருமானத்தை பெருக்கி வறுமையையும், ஏழ்மையையும், போக்குவதற்கு  கோரிக்கையையும் முன் வைத்து இந்த தொகையை வழங்குகிறேன் என்றும்  இந்த தொகையை எனது குடும்பத்தின் சார்பாக வழங்குகிறேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget