மேலும் அறிய

தமிழ்நாட்டின் கடனை அடைக்க 2.69 லட்சத்திற்கு காசோலை எடுத்து வந்த நபரால் நாமக்கலில் பரபரப்பு

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழக அரசின் வெள்ளை அறிக்கையின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2.60 லட்சம் கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது பங்கான ரூ.2.60 லட்சத்தினை காசோலையாக வழங்க வந்த நபரால் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  2 லட்சத்து 69 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார்.  அந்த கடனை அடைக்க நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனருமான ரமேஷ் தியாகராஜன் தனது  குடும்பத்திற்கான பங்கினை 2,69,976 ரூபாய்க்கான தொகையை காசோலை வாயிலாக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து வழங்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார்.

வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை, ராஜேஷ் தியாகராஜன் சந்தித்த போது அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட கோட்டாட்சியர் கோட்டை குமார் அறிவுறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங்கை சந்தித்து தன் குடும்பத்தின் மேல் உள்ள கடன் தொகையை வழங்கிட ஆட்சியர் அலுவலகம் சென்றார். அங்கு ஆட்சியர் இல்லாததால் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் காசோலையை வழங்காமல் ரமேஷ் திரும்பி சென்றார். தமிழக நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி தனது கடன் பங்கான ரூ.2.69 லட்சத்தினை செலுத்த வந்த நபரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரமேஷ் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியபோது,

தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் கடனை  முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதற்காக தனது குடும்பத்திற்கான கடன் தொகையை காசோலையாக வழங்க உள்ளதாகவும், கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டின்  நகலையும் தனக்கு தரவேண்டும் என்றும் மேலும் இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு 15 லட்சம் குடும்ப கடனாக வழங்கி குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து தமிழ் நாட்டின் பொருளாதாரத்தையும் பெருக்கவும் தனி நபருடைய வருமானத்தை பெருக்கி வறுமையையும், ஏழ்மையையும், போக்குவதற்கு  கோரிக்கையையும் முன் வைத்து இந்த தொகையை வழங்குகிறேன் என்றும்  இந்த தொகையை எனது குடும்பத்தின் சார்பாக வழங்குகிறேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget