மேலும் அறிய

பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை

குரங்குகள் கிராமத்தில் உள்ள தென்னை மரத்தில் உள்ள பிஞ்சுகளை பறித்து வீணடித்து வருகிறது. மேலும் ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை அழித்து நாசம் செய்வதுமாக இருந்து வருகிறது

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஞ்சேனள்ள ஊராட்சிக்குட்பட்ட சின்ன பெரமனூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள், கூட்டமாக வெளியேறி கிராமத்திற்கு நுழைந்துள்ளது. இங்கு வந்துள்ள குரங்குகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை மரத்தில் உள்ள பிஞ்சுகளை பறித்து வீணடித்து வருகிறது. மேலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள ராகி, சோளம், நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு நுழைந்து உணவாக உண்பது பயிர்களை அழித்து நாசம் செய்வதுமாக இருந்து வருகிறது.

பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
 
மேலும் அங்குள்ள கடைகளில் நுழைந்து தின்பண்டங்களை பறித்துச் செல்வது, குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்கிறது. மேல வீடுகளுக்கு கூட்டமாக நுழைந்து குதூகலமாக விளையாடுவது, பொருட்களை கீழே தள்ளிவிட்டு, அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் துரத்துகின்றவர்களை கடிப்பதற்காக பாய்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர். மேலும் பூட்டி உள்ள வீடுகளில் நுழைந்து வீட்டில் உள்ள சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்களை எடுத்துச் செல்வது பாத்திரங்களை கீழே தள்ளி பொருட்களை சேதம் செய்து வருகிறது.
 
பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
 
இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, கிராமத்தில் உள்ள குரங்குகளை பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஆனால் வனத் துறையினர் இத்தனை குரங்குகளை பிடிப்பதற்கு வழி இல்லை. ஒரே ஒரு குண்டு மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிராம மக்களே குரங்கு பிடிப்பவரை அழைத்து வந்து ஒரு சில குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

பென்னாகரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகள் - நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
 
ஆனால் ஒரு குரங்கை பிடிப்பதற்கு 300 ரூபாய் என்பதால் மொத்த குரங்கையும் கிராம மக்களால் பிடித்து வெளியில் விட பண வசதி இல்லை. இதனால் மீத மிருந்த குரங்குகள் மேலும் இனப்பெருக்கம் உற்பத்தியாகி தற்போது  50க்கும் மேற்பட்ட குரங்குகள் கிராமத்திற்குள் சுற்றி வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தினந்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராமத்திற்குள் நுழைந்து, கிராம மக்களை அச்சுறுத்தி வரும், குரங்குகளை பிடித்து வனப் பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ABP Premium

வீடியோ

தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest
Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Case Against Trump's Order: ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
ட்ரம்ப்புக்கு எதிராக ஒன்றுதிரண்ட 20 மாகாணங்கள்; H-1B கட்டணம், கட்டுப்பாடுகளுக்கு எதிராக வழக்கு
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
சபரிமலை யாத்திரை: பக்தர்களுக்காக 48 சிறப்பு ரயில்கள்! முன்பதிவு செய்து பயணிக்க ரயில்வே அறிவிப்பு!
Christmas 2025: சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? - கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
சாண்டா கிளாஸின் உண்மையான அர்த்தம் என்ன? -கிறிஸ்துமஸ் உணர்த்தும் ஆழமான ஆன்மீக செய்தி என்ன?
TN Rain Alert: நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
நாளை தமிழகத்தில் பனிமூட்டம்! மழைக்கும் வாய்ப்பு உண்டா? மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றைய வானிலை அறிக்கை வெளியீடு
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Embed widget