மேலும் அறிய

தருமபுரியில் வயதான தம்பதியை கொன்ற 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு...!

’’பணத்திற்காக வயதான தம்பதியை கொலை செய்துவிட்டு கத்தி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு சென்றது கண்டுபிடிப்பு’’

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் அவரது மனைவி ஓய்வு பெற்ற ஆசிரியர் சுலோச்சனா தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இரவு வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கிருஷ்ணன் மற்றும் சுலோச்சனா இருவரையும் அடித்து படுகொலை செய்து விட்டு பணம், நகை, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு இவற்றை கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து தோட்டத்தில் தனியாக வசித்த வந்த வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தருமபுரியில் வயதான தம்பதியை கொன்ற 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு...!
 
தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து பொம்மிடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்பொழுது இவர்களது ஏடிஎம் கார்டு வைத்து திருப்பூரில் பணம் எடுத்து தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில்  பில்பருத்தி பகுதியைச் சார்ந்த வேலவன், பிரகாஷ்ராஜ், முகேஷ், ஹரீஸ், சந்துரு, எழிலரசன் ஆகிய 6 பேர் பணத்திற்காக முதியவர்களை கொலை செய்துள்ளனர். தொடர்ந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அவர்களுடைய செல்போன் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
 
தருமபுரியில் வயதான தம்பதியை கொன்ற 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு...!
 
இதனைத் தொடர்ந்து ஆறு பேரையும் பொம்மிடி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தம்பதியினரின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு, 5 சவரன் தாலி கொடி, 18,000 ரொக்கம் உள்ளிட்டவைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து ஆறு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வயதான தம்பதியரை கொலை செய்த வழக்கில் கைதான, பிரகாஷ்ராஜ், முகேஷ், சந்துரு ஆகியோர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், முகஷ், சந்துரு, மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்த மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.
 
தருமபுரியில் வயதான தம்பதியை கொன்ற 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு...!
 
இதனை தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ள பிரகாஷ் ராஜ், முகேஷ், சந்துரு ஆகிய மூன்று பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர். அதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் தருமபுரி காவல் துறையினர் வழங்கினர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்PTR Palanivel Thiyagarajan :உதயநிதி விழாவை புறக்கணித்த PTR?இரவில் நடந்த சந்திப்பு!அறிவாலயம் EXCLUSIVEDindigul Rowdy Murder : பிரபல ரவுடி வெட்டிக்கொலை!திமுக பிரமுகர் கொலையில் தொடர்பு?Mallikarjun Kharge Fainted : மயங்கி விழுந்த கார்கே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி  - விஜயபாஸ்கர்
கப்பலை ஓட்டிச் செல்வது எடப்பாடி பழனிசாமி என்ற மாலுமி - விஜயபாஸ்கர்
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
தஞ்சை கூலித்தொழிலாளி மகளின் மருத்துவக் கனவு நனவாகுமா? அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
Udhayanithi Stalin: முதல் முறையாக மதுரை வரும் துணை முதல்வர்: மு.க.அழகிரி இல்லம் செல்வாரா?
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
TN ALERT App: அடி தூள்.. இனி வானிலை முன்னெச்சரிக்கைகளை போனிலேயே பெறலாம்; அரசு அசத்தல் அறிவிப்பு- விவரம்
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Dadasaheb Phalke Award: திரைத்துறையின் உயரிய கவுரவம்..! பிரபல நடிகருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Nepal Flood: நேபாள வெள்ளப்பெருக்கு - கொத்து கொத்தாக சடலங்கள் - 170-ஐ தாண்டிய உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 30th SEP 2024: 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Embed widget